தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் சார்பாக ஏப்ரல் 5, 6 ஆகிய நாள்களில் சமூக நீதிக்கான யூபிலி திருப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மறைமாவட்டம் சமயநல்லூரில் தொடங்கி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புப் போராட்டம் வெற்றிபெற்ற இடங்களைப் பார்வையிட்ட இவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் மத ஒற்றுமையைப் பாதிக்க முயன்ற நிகழ்வுகளை ஆராய்ந்தனர். கொடைக்கானலில் நற்கருணை ஆராதனையில் பங்கெடுத்து, இயேசுவின் பாடுகளையும், சமூக நீதிப் போராளிகள் ஸ்டேன் சுவாமி, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரின் வாழ்க்கையையும் தியானித்தனர். இந்நிகழ்வைத் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குநர் அருள்பணி. எடிசன் ஒருங்கிணைத்தார்.