news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (13.04.2025)

தம் அருளால் நம்மை இரக்கத்தின் பணியாளர்களாக நியமித்துள்ள இறைவனிடமிருந்து மன்னிப்பின் அனுபவத்தைப் பெற்றுள்ள நாம், அதே கொடையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருவோம்.”

- மார்ச் 25, இளையோர் கூட்டத்திற்கான செய்தி

இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், இனி நமக்கு எதிர்நோக்கு இல்லை என்று நாம் நினைக்கும் நேரத்தில் அவர் நம் கண்முன் காணப்படுகிறார்.”       

- மார்ச் 26, மறைக்கல்வி உரை

கடவுளின் இரக்கத்திலிருந்து பிறக்கும் உண்மையான அமைதி, நம்மை ஒருபோதும் ஏமாற்றாத எதிர்நோக்கைக் கொணர்கிறது.”

- மார்ச் 27, அருள்பணியாளருக்கான செய்தி

இறைவன் எப்போதும் நம்முடன் நடக்கின்றார், நமது சோதனை நேரங்களில் நம்மைத் தாங்குகின்றார், அவரது அமைதி மற்றும் அன்பின் சான்றுகளாக இருக்க நம்மை அழைக்கின்றார்.”

- மார்ச் 29, செக். குடியரசு நாட்டின் ஆயர் பேரவையினருக்கு வழங்கிய செய்தி

உயிருள்ள சுடரைப் போல, நமது வாழ்க்கைப் பயணத்திற்குக் கடவுளின் அன்பு பலம் அளிக்கின்றது என்ற உணர்வுடன் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்நோக்கின் சான்றுகளாக வாழ வேண்டும்.”                      

- மார்ச் 29, திருப்பயணிகளுக்கான செய்தி