news-details
இந்திய செய்திகள்
இந்திய அருள்சகோதரிகளுக்கு விழிப்புணர்வு தரும் பயிற்சிப் பட்டறைகள்

இந்தியாவில் உள்ள கத்தோலிக்க அருள்சகோதரிகள் பாலியல் முறைகேடுகள், மனநலப் பாதிப்புகள் மற்றும் தற்கொலைப் போக்குகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளப் பயிற்சிப் பட்டறை ஒன்று அண்மையில் கோவாவில் நடைபெற்றது. இந்தியக் கத்தோலிக்கப் பெண் துறவு சபைகள் அமைப்பானது (CRWI) பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சிப் பட்டறையில் 50 அருள்சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர். மனநலம், கடுந்துன்ப மதிப்பீடு, ஆற்றுப்படுத்துதல், அறநெறிமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் வழியாக அருள்சகோதரிகள் மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், மனநலம் மற்றும் நலவாழ்வு குறித்த இந்தப் பயிற்சித் திட்டத்தால் ஏறக்குறைய 350 அருள்சகோதரிகள்  பயனடைந்துள்ளனர் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.