news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அனைத்துத் தொழில் துறைகளும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான செயல்திறன் மிக்க தொழில்நுட்ப அறிவாற்றல் தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை வடிவமைக்க தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இயந்திரவழிக் கற்றல், தரவு அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உறுதுணை புரிகின்றன. தொழில்நுட்பங்களைப் படைப்பாற்றலுடன் ஒருங்கிணைத்து உருவாக்கும் புத்தாக்கத் திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

- பேராசிரியர் டேனியல் சந்திரன், சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை முதல் தலைமுறை உரிமைகள் என அழைக்கிறோம். அடுத்து சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை இரண்டாவது தலைமுறை உரிமைகள் என்கிறோம். பின்னர் வளர்ச்சி, சுகாதாரச் சூழலுக்கான உரிமைகள் போன்ற கூட்டுரிமைகள் மூன்றாவது தலைமுறை உரிமைகள் எனப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் நான்காவது தலைமுறை உரிமைகள் உருவாகியுள்ளன. இது பாலினத்தை மாற்றும் உரிமை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல், இனப்பெருக்க உரிமைகள் போன்ற தனிப்பட்ட சுயாட்சி உள்ளிட்ட உடலியல் சார்ந்த உரிமைகளாகவும் இணைய உரிமை, அந்தரங்க உரிமை, எண்ம ஆளுமைக்கான உரிமை போன்ற எண்ம மற்றும் தகவல் உரிமைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய உரிமைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை நம்முடைய பழைய உரிமைகளுக்கும் விழுமியங்களுக்கும் சவாலாக உருவாகியுள்ளன.”

- நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

மனிதர்களால் செய்யப்படும் பல்வேறு வேலைகளை மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரங்களால் செய்ய முடியும் என்பது உண்மைதான். அதேநேரம், இதனால் வேலைவாய்ப்பே இல்லாமல் போவதற்கு இன்னும் காலம் அதிகம் இருக்கிறது. முன்பு கம்ப்யூட்டர் வந்தபோதும் வங்கிகள், இரயில்வே துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால், அது பலுகிப் பெருகி இருக்கிறது. மக்கள்தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி இருக்கும் வரை ஒரு வேலை போனாலும், புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.”

- திரு. சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்