news-details
உலக செய்திகள்
குழந்தைகளின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் காக்கப்பட வேண்டும்!

உலகில் பத்தில் ஒரு சிறார் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நாம் விவாதிக்க வேண்டிய அவசரத் தேவையாக உள்ளதுஎன .நா.வில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா. இன்று உலகில் பல நாடுகளில் சிறுவர் தொழிலாளர் முறை தொடர்வது குறித்தும், சிறார் ஆயுத மோதல்களுக்கெனத் திரட்டப்படுவது குறித்தும் திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொள்வதாகக் கூறிய அவர், சிறார் போர்க்களத்தில் வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்படுவது, கட்டாயத் திருமணங்கள், பாலியல் அத்துமீறல்கள் உள்பட பல்வேறு உரிமை மீறல்களிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அனைத்து நாடுகளும் உழைக்க வேண்டும் எனவும் திருப்பீடம் விண்ணப்பிப்பதாகத் தன் உரையில் வலியுறுத்தியுள்ளார்.