news-details
இந்திய செய்திகள்
இந்திய - தமிழ்நாடு ஆயர் பேரவையின் நினைவூட்டல்

புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பெயரைத் திரு அவைக்காகத் திருப்பலியில் மன்றாடும்போதுதிருத்தந்தை 14-ஆம் லியோஎன்று கூறுவதற்குப் பதிலாகதிருத்தந்தை லியோஎன்று மட்டும் உச்சரிக்கவேண்டும். மேலும், 14-ஆம் சிங்கராயர் என்று உச்சரிப்பது தவிர்க்கப்படவேண்டும் என இந்திய ஆயர் பேரவை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆயர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது முதல் பெயரை மட்டும் உச்சரிக்க வேண்டும் எனவும் மேனாள் ஆயர்கள் திருப்பலி நிறைவேற்றும்போதோ அல்லது பங்கெடுக்கும்போதோ அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும் எனவும் இந்திய ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.