• 14-09-1955 அன்று அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட்.
•
இவரது தந்தை Louis Marius Prevost பிரெஞ்சு
மற்றும் இத்தாலிய மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர். தாயார்
Mildred Martinez இஸ்பானிய
மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர். இவருக்கு Louis Martin மற்றும்
John Joseph என்னும் இரு சகோதரர்கள் உள்ளனர்.
•
புனித அகுஸ்தீன் சபையின் இளங்குருமடத்தில் சேர்ந்து கல்வி பயின்ற இவர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார்.
•
1977, செப்டம்பர் 1-ஆம் நாள் சிகாகோவில் உள்ள செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற
இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார்.
•
1978, செப்டம்பர் 2 அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும்,
1981, ஆகஸ்டு 29 அன்று தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.
•
சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம் பெற்ற இவர், தனது 27-வது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
•
1982, ஜூன் 19-ஆம் நாள் சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால்
குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
•
1984-ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பெற்ற இவர், அடுத்த ஆண்டு தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக (1985-1986) அனுப்பப்பட்டார்.
•
1987-ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இவர், இலினாய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ள ‘நல்லாலோசனை அன்னை’ என்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறையழைத்தல் இயக்குநராகவும் மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
•
1999-ஆம் ஆண்டில் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறைமாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறையாகவும், பின்னர் 2007-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
•
2013-ஆம் ஆண்டு சிகாகோவின் அகுஸ்தீன் சபையின் முதல் ஆலோசகர், இறையழைத்தல் இயக்குநர்.
•
2014, நவம்பர் 3-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 12-ஆம் நாள் குவாதலூப்பே அன்னை மரியா விழாவன்று அன்னை மரியா பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
•
2015, செப்டம்பர் 26 அன்று சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018, மார்ச் மாதம் பெரு நாட்டு ஆயர் பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதில் இவர் பொருளாதாரக் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
•
2020, ஏப்ரல் 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
•
2023, செப்டம்பர் 30 அன்று கர்தினாலாக உயர்த்தப்பட்டு, ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் புதிய தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
•
2025, மே 8 அன்று திரு அவையின் 267-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
•
அகுஸ்தீன் சபையைச் சார்ந்த இவர் ‘பதினான்காம் லியோ’ என்னும் பெயரினைத் தனது பெயராக ஏற்றுள்ளார்.