news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தையின் திருவாக்கு - திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (25.05.2025)

கடவுள் நம்மை அன்பு செய்கின்றார், நம் அனைவரையும் அன்பு செய்கின்றார். தீமை வெற்றிபெறாது! நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்.”

- மே 8, திருத்தந்தையின் முதல் ஊர்பி எத் ஓர்பி  (Urbi et Orbi) செய்தி

கடவுள் அன்பின் மிக அழகான வெளிப்பாடுகளில் ஒன்று அன்னையர்; அவர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மீது அளவற்ற அன்பினைப் பொழிபவர்கள்.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உறவின் பாலங்களைக் கட்டுவது என்பது தீர்ப்பளிக்காமல் இருப்பது, செவிசாய்ப்பது மற்றும் கதவுகளை மூடாமல் இருப்பது.”

- மே 11, நல்லாயன் ஞாயிறு மறையுரை

உண்மையான, நீதியான, நீடித்த அமைதி விரைவில் தேவை. போர் இனி ஒருபோதும் வேண்டாம்.”

- மே 11, ஞாயிறு மூவேளைச் செபவுரை

அளப்பரிய ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை

மனிதகுல நன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும்.”

- மே 12, உலகச் சமூகத் தொடர்புத் துறையினருக்கு ஆற்றிய உரை