news-details
இந்திய செய்திகள்
காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்கர் நல்லடக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 57 வயதான கத்தோலிக்கர் சுஷயீல் நத்தனியேல் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். இந்தோர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்தபோது, பயங்கரவாதிகள் இவரைச் சுட்டுக்கொன்றனர். ஏப்ரல் 24 அன்று இந்தோர் மறைமாவட்ட ஆயர் தோமஸ் மேத்யூ குட்டிமக்கல் தலைமையில் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. நத்தனியேலின் மனைவி ஜெனிபர், பயங்கரவாதிகள் அவரை மதம் கேட்டுச் சுட்டதாகத் தெரிவித்தார். இவரது குழந்தைகள் தப்பியோடியபோது காயமடைந்தனர்.