திருத்தந்தையர்களில்
நீர்
ஒரு திருப்புமுனை!
ஏழைகளுக்காகப்
போராடிய
போராளியே!
ஏழைகளை
நேசித்த
இயேசுவின்
தாசரே!
மரபுகளை
உடைத்தெறிந்த
மகாத்மாவே!
பெண்ணியம்
போற்றியதோடு
ஆட்சிப்பீடத்தில்
அதிகாரம்
கொடுத்த
அருள்
வள்ளலே!
எளியோரின்
நலனில்
இயேசுவாகவே
வாழ்ந்தீரே!
சுவாசம்
உள்ளவரை
ஏழைகளைச்
சுவாசித்த
சுதனே!
முதியவர்களைச்
சுமையாகக் கருதியவர்கள்
மத்தியில்
தாத்தா-பாட்டி
தினமாகக்
கொண்டாட
வழிவகுத்தீரே!
ஏழைகளுக்காக
உதித்த
உதய சூரியனே!
கூட்டொருங்கியக்கத்
திரு
அவையின்
கொள்கைத்
திறவுகோலே!
மனிதமே
புனிதம் என்பதனை
மானுடத்திற்குச்
சொல்ல வந்த
மகா
காவியமே!
பெண்களின்
பாதங்களைக்
கழுவிய
பெருந்தகையாளரே!
விளிம்பு
நிலை மக்கள்
வெளிச்சம்
பெற வந்த விடியலே!
சிறையில்
இருப்போரையும்
சிநேகித்தவரே!
உலகில்
அமைதி நிலவ
அதிபர்கள்
காலில் விழுந்த
திருத்தந்தைகளில்
நீர்
ஓர் அதிசயமே!
என்
சீலைகளைத் தவிர்த்து
ஏழைகளுக்கு
உதவ
ஒப்பனை
அறைகள்
கட்டப்
பணித்தவரே!
இரக்கம்
நிறைந்தவர் என்பதாலோ
இறை
இரக்க ஞாயிறு(க்)குமுன்
இரக்கமிக்க
ஆண்டவர் அழைத்தாரோ!
திரு
அவையின்
திருப்புமுனை
திருத்தந்தையே!
திரும்பி
வாரும்!
(சீர்)திருத்தம்
தாரும்!