news-details
இந்திய செய்திகள்
புதிய திருத்தந்தை இந்திய நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு

வத்திக்கானில் நடந்த ஒரு கூட்டத்தில் CBCI தலைவரான திருச்சூர் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் திருத்தந்தையை இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்திய மக்கள் அனைத்துச் சடங்குகள் மற்றும் சமயங்களைக் கடந்து  திருத்தந்தை லியோ அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறிய பேராயர், “திருத்தந்தையின் வருகை நம்பிக்கையாளர்களுக்கு ஓர் ஆழமான ஆசிராகவும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நம்பிக்கை, அமைதி மற்றும் ஒற்றுமையின் வலுவான அடையாளமாகவும் இருக்கும்என்றும் தெரிவித்தார்.