குருதி சிந்தி மறைச்சாட்சிகளாக மரித்த 15 தூய கத்தரீன் சபை அருள்சகோதரிகளை மே 31 அன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தியுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ. இவர்கள் போலந்து மீதான இரஷ்யப் படையெடுப்பில் 1945 ஜனவரி 22 முதல் நவம்பர் 25 வரை வன்முறையாளர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மறைச்சாட்சிகளாகத் தங்கள் உயிரை இழந்தவர்கள்.