news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சட்டங்களை இயற்றுவதும், அவற்றில் திருத்தங்கள் செய்வதும்தான் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம், மாநிலச் சட்டப் பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது.”

- உச்ச நீதிமன்றம்

நீதித்துறையில் நடைபெறும் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் சாத்தியக்கூறு உள்ளது. நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அது உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் தீர்க்கமான, விரைவான, வெளிப்படையான நடவடிக்கைகளின் மூலம் நம்பிக்கையை நாம் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். மேலும், நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றவுடன் அரசின் மற்றொரு நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காக நீதிபதி பதவியை இராஜினாமா செய்வது நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.”

- உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக அனைவரும் பெருமையாகக் கூறி வருகின்றனர். ஆனால், எனக்கு அவற்றில் பெரிதளவு உடன்பாடு கிடையாது. நமது நாட்டில் வெறும் 10 சதவிகித நிறுவனங்கள்தாம் 50 சதவிகிதப் பொருளாதாரத்தை ஈட்டுகின்றன. இப்படிப் பணக்கார நிறுவனங்கள், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது. இங்குக் கிராமங்களில் உள்ள சாதாரண விவசாயிகளுக்கு உடுத்த உடை, தினமும் மூன்று வேளை சாப்பாடு, அவர்களது குழந்தைகளைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் அளவு பொருளாதார வசதி ஆகியவை கிடைக்கும்போதுதான் நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவோம்.”

- மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ்