news-details
இந்திய செய்திகள்
ஜலந்தர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்!

ஜூன் 7, சனிக்கிழமை திருத்தந்தை 14-ஆம் லியோ இந்தியாவிலுள்ள ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு ஜோஸ் செபாஸ்டின் அவர்களைப் புதிய ஆயராக நியமித்துள்ளார். 1962, டிசம்பர் 24 அன்று கேரளாவில் உள்ள பாலை மறைமாவட்டத்தின் களக்கட்டி என்னும் ஊரில் பிறந்த இவர், 1991, மே 1 அன்று ஜலந்தர் மறைமாவட்ட அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். உரோம் உர்பானே திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டத்தில் முதுகலைக் கல்வி கற்றார். ஜலந்தர் மறைமாவட்டத்தின் துணைவேந்தர், மறைக்கல்வி இயக்குநர், ஜலந்தரிலுள்ள தமத்திருத்துவக் கல்லூரியின் தத்துவவியல் துறையின் தலைவர், கிறிஸ்து அரசர் பள்ளி இயக்குநர் எனப் பல பொறுப்புகளில் தனது பணிகளை ஆற்றியவர் புதிய ஆயர்.