கூட்டியக்கத் திரு அவையின் ஊற்றும் உயர் மாதிரியும் மூவொரு கடவுளே. ஏனெனில், அது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் குறிப்பிடுவதுபோல ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் ஒன்றிப்பின் ஆற்றலால் ஒன்றுகூட்டப்பெற்ற மக்கள் குலம்’ (திரு அவை 4). மானிடரைச் சந்திக்க வரும் கடவுளின் மூவொருமையின் இயக்க ஆற்றல் ‘நான்’ என்பதிலிருந்து ‘நாம்’ எனும் உளப்பாங்கிற்கும் உறவு ஒன்றிப்பிற்கும் நம்மைக் கொண்டுவந்து, உலகிற்கு இறையாட்சிப் பணியாற்ற திரு அவையை இட்டுச்செல்கிறது.
திரு
அவையின் கூட்டியக்கப் பயணம் இறையாட்சியை நோக்கியதே. அப்பணியை ஆற்ற அதற்கு இன்றியமையாதது கிறித்தவக் குழுமங்களின் புதுப்பித்தல். இறையருளின் முதன்மையை நாம் அறிந்து ஏற்றுக்கொண்டால்தான் அப்புதுப்பித்தல் நிகழ முடியும். “அருள்வாழ்வுசார் அடித்தளமின்றிக் கூட்டியக்கத்தன்மை மேலோட்டமானதாகவே இருக்கும்”
(முஅ* 2c). அந்த
அருள் அனுபவம் குழும இயக்கமாகச் செயலாக்கம் பெறும். அது மட்டுமின்றி, அக்குழும ஆளாள் உறவு அனுபவமே இறைச் சந்திப்பின் ஒரு தளமாகவும் வகையாகவும் திகழ முடியும். தூய ஆவியாரில் நிகழும் இந்த உறவாடலும் உரையாடலும் “ஆவியார் திரு அவைகளுக்குச் சொல்வதைத் தெளிந்து தேர்ந்திட உதவும் உண்மையான செவிமடுத்தலுக்கு வழிவகுக்கும்” (முஅ
2d). இவ்வாறு
இந்த உறவாடலும் உரையாடலும் மனமாற்றத்திற்கான தூண்டுதலையும் தரும். (முஅ) மாமன்ற முதல் அமர்வின் அறிக்கையையும், (இஅ) இறுதி அறிக்கையையும் குறிக்கின்றன.
திரு
அவையின் கூட்டியக்கத்தின் நோக்கம் நற்செய்திப் பணி என்பதால் கிறித்தவக் குழுமங்கள் பிற சமயத்தார், மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் பண்பாடுகள் என்பவற்றுடனும் கூட்டுத் தோழமையை ஏற்படுத்துவது அவசியம். “ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், இணைந்து பயணித்தல் என நடைபெறும் இந்தக்
கலந்துரையாடலின் தாக்கம் நற்செய்தி அறிவிப்பு, ஏழைகளுக்கான பணி, நமது பொதுவீடாகிய இந்நில உலகின் நலம் பேணுதல், இறையியல் ஆய்வு என்பவற்றின் பண்புகளாகப் பரிமளிக்கவேண்டும்” (முஅ
2e).
நம்பிக்கைக் குழுமத்தில்
புகுநிலைப்படுத்தல்
இறைவார்த்தையைக்
கேட்டல், வாழ்க்கை மாற்றம், திருவழிபாடு, கிறித்தவக் குழும வாழ்விலும் அதன் நற்செய்திப் பணியிலும் பங்கேற்பு என்பவையே நம்பிக்கைக் குழுமத்தில் புகுதலை ஓர் இணைந்த பயணம் ஆக்குகின்றது. அதன் வழியாக நம்பிக்கையாளர் உயிர்ப்பு நம்பிக்கையின் அறிமுக அனுபவத்தைப் பெறுகிறார்; மூவொரு கடவுள் மற்றும் திரு அவையின் ஒன்றிப்புறவில் இணைக்கவும்படுகிறார்.
இவ்வாறு
நம்பிக்கையாளர் குழுமத்தில் புகுவதன் வழியாக ஒவ்வொருவரும் திரு அவையில் உள்ள பல்வேறு அழைத்தல்கள், பணிகள் என்பனவற்றுடன் இணைக்கப்படுகின்றனர். அவற்றின் வழியாக அன்னையாகிய திரு அவை தம் மக்களோடு இணைந்து பயணித்து அவர்களுக்கு வாழ்க்கைப் பயணமுறையைக் கற்றுத்தருகிறது. “அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அது பதிலளிக்கிறது. ஒவ்வொருவருடைய வரலாறு, மொழி, பண்பாடு என்பவற்றின் புதுமை வழியாக அதுவும் வளமை அடைகிறது”
(முஅ 3o). இதுவே
கிறித்தவக் குழுமம் மேற்கொள்ளும் இணைந்த பயணத்தின் தொடக்கம்.
“நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்”
(1கொரி 12:13). இதனால் திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் இடையே மாண்பிலும் அவரவர் அழைத்தலுக்கேற்ப நற்செய்திப் பணியாற்றும் பொதுவான பொறுப்பிலும் உண்மையான சமத்துவம் நிலவுகிறது. இதனால் “இறைமக்கள் சமூகம் முழுவதும் நற்செய்தி அறிவிப்பின் முகவரே. நாம் எல்லாரும் மறைத்தூதுச் சீடர்கள் என்பதால், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறைத்தூதுப் பணியை முன்னெடுக்க அழைக்கப்பட்டவரே” (இஅ
4). ஒவ்வொருவரும் தாம் வாழும் மற்றும் பணியாற்றும் சூழமைவில் தம் வாழ்க்கை நிலைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப மறைத்தூதுப் பணி ஆற்ற அழைக்கப்பட்டுள்ளனர். அவரவரது வாழ்க்கை நிலை, தொழில், குடிமைச் சமூக-அரசியல்-சமூக- சுற்றுச்சூழல் ஈடுபாடு என்பவற்றிற்கு ஏற்ப அவர்கள் நற்செய்திப் பணியாற்றும் முறைகள் வேறுபட்டும், தூய ஆவியாரின் துணையுடன் தேவைக்கேற்ப புதுப்புது வகைகளிலும் அவை அமையும்.
மேலும்,
திருமுழுக்குப் பெற்றவர்களிடம் தூய ஆவியிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொள்ளும் நம்பிக்கை உணர்வு உள்ளது. இது அவர்களிடம் இயல்பாகவே எழும் நற்செய்தியின் உண்மைக்கான நாட்டம். நம்பிக்கையாளர்களின் இந்த ஒத்த உணர்வைக் கூட்டியக்க நடைமுறை உறுதிப்படுத்தி வளர்த்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட கோட்பாடோ செயல்பாடோ திருத்தூதர்சார் நம்பிக்கைக்குரியது என்பதைத் தீர்மானிக்க இந்நடைமுறை ஓர் உறுதியான அளவுகோலைத் தருகிறது.
உறுதிபூசுதல்
எனும் அருளடையாளத்தின் வழியாகப் பெந்தக்கோஸ்தின் அருள் திரு அவையில் நிலைத்திருக்கிறது. நம்பிக்கையாளர்களை அது ஆவியாருடைய கொடைகளால் வளப்படுத்துகிறது. நற்செய்திப் பணியாற்றுவதற்கான தங்கள் தனி அழைத்தலை வளர்த்தெடுக்க அது ஒவ்வொருவரையும் அழைக்கவும் ஆற்றல்படுத்தவும் செய்கிறது.
நற்கருணைக்
கொண்டாட்டம், அதிலும் சிறப்பாக ஞாயிறு திருப்பலி நம்பிக்கை வாழ்விற்கு அடிப்படையானது. “ஆண்டவரது உடலையும் உதிரத்தையும் உட்கொள்வதன் வழியாகப் பிறரோடும் அவரோடும் அவர் நம்மை ஓருடலாக உருவாக்குகிறார்” (முஅ
3e). இது
நம்மை இணைந்து பயணிக்க அழைக்கிறது.
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. தெளிதேர்வு
செய்து இறைவனின் குரலை இனம்காண்பதற்கான அளவுகோல்கள் இறையியல் கண்ணோக்கில் தெளிவாகவும் ஆழமாகவும் வரையறுக்கப்பட வேண்டும். குறிப்பாக, திருவிவிலியம், திரு அவை மரபு மற்றும் ஆசிரியம் என்பனவற்றுடன் காலத்தின் அறிகுறிகளையும் முன்வைத்துக் கடவுளின் திருவுளத்தைக் கண்டறியும் முறை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
2. நம்பிக்கை
அனுபவத்தில் பகுத்தறிவு மற்றும் உணர்ச்சி எனும் இரு பரிமாணங்களையும் நலமாக இணைத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் இறையியல் சிந்தனைகளுடன் கலை மற்றும் சமூக அறிவியல்களின் பங்களிப்புகளையும் எவ்வாறு இணைத்துக்கொள்ள முடியும் என்பதுவும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
3. பல்வேறு
அருள்பணிகளிலும் சிறப்பாக, திருமணம், பல்வேறு தொழில்கள் மற்றும் சமூகத் துறைகள் என்பவற்றிலும் கிறித்தவ மனநிலையுடன் ஈடுபடுவதற்கான உருவாக்கமாகக் கிறித்தவப் புகுநிலைப் பயிற்சியை அமைப்பது பற்றிய ஆய்வுகள் தொடரப்படவேண்டும்.
4. கிறித்தவப்
புகுநிலைப்படுத்தல் பற்றி இன்னும் அதிகமான ஒன்றிணைந்த பார்வை உருவாக்கப்பட்டு, அது திரு அவையின் கூட்டியக்கத் தன்மையைப் புரிந்து வாழ்ந்திட எவ்வாறு உதவமுடியும் என்பது பற்றி ஆழமாகச் சிந்திப்பது அவசியம் (முஅ 3g).
5. எல்லா
நம்பிக்கையாளர்களிடமும்
குழுமத்தைக் கட்டியெழுப்பவும் உலகில் நற்செய்திப் பணியாற்றவும், நம்பிக்கைக்குச் சாட்சியம் பகர்வதற்குமான அழைத்தலை எழுச்சியுறச் செய்யும் வகையில் உறுதிபூசுதலுக்கான தயாரிப்பை மேம்படுத்தும் முறைகள் கண்டறியப்படவேண்டும்.
6. நற்கருணை
திரு அவையின் கூட்டியக்கத்திற்கு ஊற்றாகி உருக்கொடுப்பது. இதனால் இயேசுவுடனான ஆளாள் உறவையும் நம்பிக்கையாளர்களுக்கு இடையிலான குழும உறவையும் வளர்த்தெடுக்க உதவும் முறையில் அதைக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
7. மேலும்,
பரவலாக எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைக்கேற்பத் திருவழிபாட்டு மொழி அனைத்து மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் அந்தந்தப் பண்பாடுகளில் உருவெடுப்பதாகவும் இருக்கவேண்டும். இப்பணியில் அதிகப் பொறுப்பு ஆயர் பேரவைகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் (முஅ 3l).
8. வேறு
எந்தப் பயிற்சி முறையையும்விட அதன் (திருவழிபாட்டின்) எழிலும் எளிமையுமே நம்மை முதன்மையாக உருவாக்கவேண்டும்
(முஅ
3k). * முன்னமர்வு
(மு.அ.)