news-details
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் மறைப்பணியை விவரிக்கும் ஆவணப்படம்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் பெரு நாட்டில் (Robert Francis Prevost) மறைப்பணியாளராக, பங்குப்பணியாளராக, பேராசிரியராக, உருவாக்குநராக, ஆயராக, நண்பராக ஆற்றிய மறைப்பணிகளை எடுத்துரைக்கும் விதமாக, ‘லியோன் தி பெருஎன்ற புதிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்பானிய மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படமானது, பெரு நாட்டில் உள்ள பல்வேறு சிறிய, பெரிய நகரங்கள், கிராமங்கள், மாவட்டங்கள், புறநகர்ப் பகுதிகள், பள்ளிகள், துறவற சபைகள் போன்ற இடங்களில் திருத்தந்தை அவர்கள் மறைப்பணியாற்றித் திருப்பலி நிறைவேற்றியது, இளையோரைச் சந்தித்தது ஆகியவை குறித்த காட்சிகளை உள்ளடக்கியுள்ளது.

267-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பெரு மக்கள், எவ்வாறு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள் என்பதும் இக்காணொளியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.