news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (10.08.2025)

அனைத்துலக மனிதாபிமான சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். மேலும், மக்களைக் கட்டாயமாக இடமாற்றம் செய்வதைத் தடை செய்தல் வேண்டும்.”

- ஜூலை 21, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் தொலைப்பேசி உரையாடல்

விபத்தில் இறந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் நலமும் இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிச் சமூகத்திற்கு அமைதியும் கிடைக்கப்பெறுவதாக.”

- ஜூலை 23, வங்கதேச விமான விபத்து இரங்கல் செய்தி

மனிதநேயத்திலும் ஆன்மிகத்திலும் நற்செய்தியைப் பிரதிபலிக்கும்படி நாம் மாறிட வேண்டும். இதனால் நாம் இயேசு கிறிஸ்துவின் அதே மனப்பான்மை உடையவர்களாக இருக்க முடியும்.”

- ஜூலை 25, குருத்துவ உருவாக்கப் பணியாளர்களுக்கான செய்தி

உரையாடலின் மூலம் பகையை மங்கச்செய்வதையும், நீதி நடைமுறைப்படுத்தப்படுவதையும், மன்னிப்பு மதிக்கப்படுவதையும் கற்றுக்கொள்ளலாம்.”

- ஜூலை 26, Pax Christi USA தேசிய மாநாடு.

கடவுளின் நன்மை, பொறுமை மற்றும் இரக்கத்தினால் நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்; இதனால், கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல், அவர் முகம் நம் முகத்தில் பிரதிபலிக்கக்கூடியதாக அமையும்.”

- ஜூலை 27, மூவேளைச் செபம்