நம் நாடு சுதந்திரம் அடைந்து, அன்றைய மற்றும் இன்றைய ஆட்சியாளர்களின் முன்னோக்கிய அறிவியல், தொழில்நுட்பச் சிந்தனைகள், பொருளாதார வளர்ச்சிக்கான சீரிய முயற்சிகள், அவர்களின் அளப்பரிய பங்களிப்பு ஆகியவற்றால் இன்று இந்தியா, உலகம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஜெர்மனியையும் ஜப்பானையும் கடந்து, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம்.
தினமும்
27 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு, மாதத்திற்கு இரண்டு புதிய விமான நிலையங்கள் திறக்கப்படுகின்றன. பணப் பரிவர்த்தனைகளில் 46% பங்கு வங்கிக்குச்
செல்லாமல், மொபைல் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது. 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். 3 இலட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய
சாலைகள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், வங்கிக் கணக்குகள்... இவை அனைத்தும் மகிழ்ச்சி தரும் சாதனைகள்! பல குடும்பங்கள் அரசு
உதவிகளை நேரடியாகப் பெற்றுள்ளன. கிராமங்களில் மின்சாரம், குடிநீர், வீடுகள் போன்ற வசதிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், ‘இந்த வளர்ச்சி எல்லாருக்கும் சமமாகச் சென்றடைகின்றனவா?’ என்பதே நமது கேள்வி.
பல
கிராமங்களில் அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், சில இடங்களில் மருத்துவர் இல்லாமை, மருந்து பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் நீங்கவில்லை. நோயுற்றவர் தொலைதூரம் நகரம் செல்ல வேண்டிய நிலையும் தொடர்கிறது.
அரசுப்பள்ளிகளில்
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பெண்களின் கல்வி முன்னேற்றமும் உற்சாகமளிக்கிறது. ஆனால், எல்லாப் பள்ளிகளிலும் சிறந்த கற்றல் சூழல், திறமையான ஆசிரியர்கள் இருக்கின்றார்களா?
பல
கிராமங்களில் குடிநீர், சாலைகள், போக்குவரத்து வசதிகள் உருவாகி வருகின்றன. அதேநேரத்தில், சில இடங்களில் இவை இன்னும் குறைவாகவே உள்ளன. வேலைவாய்ப்புத் தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன. கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் பலர், மிகக் குறைவான வசதிகள் உள்ள வீடுகளில்தான் இன்றும் வசிக்கின்றனர்.
கிறித்தவச்
சமூகம் உள்பட பல மதத்தினரும், தன்னார்வ
அமைப்புகளும், பள்ளிகளும், மருத்துவமனைகளும் பல ஆண்டுகளாக ஏழை
மக்களுக்கு உதவி செய்து வருகின்றன. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இவற்றில் கிறித்தவச் சமூகம் சிறந்த பங்களிப்புச் செய்து வந்துள்ளது. தற்போது சில அரசின் புதிய சட்டங்கள் இப்பணிகளைத் தடுக்கும் வகையிலும் இடையூறுகள் விளைவிக்கும் சூழலையும் உருவாக்குகின்றன.
இன்று
நமக்குத் தேவையானது புள்ளிவிவர வளர்ச்சி மட்டுமல்ல; மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம். நமது விழாக்களில் செலவுகளைக் குறைத்து, ஏழைக் குடும்பங்களுக்குக் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் முதலீடு செய்ய நாம் சிந்திக்க வேண்டும்.
சுதந்திர
இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்றால், நகரத்தில் உள்ள ஒரு மாணவனுக்கும், கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் மகனுக்கும் ஒரேமாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதுதான்; ஒரே மாதிரியான கனவுகள் வளர்வதுதான்; மருத்துவச் சேவைகள் நகர மக்களுக்கும் கிராம மக்களுக்கும் சமமாகக் கிடைப்பதுதான்.
நம்மால்
முடிந்த அளவில் கருணையுடனும் நீதியுடனும் அன்புடனும் செயல்பட்டால், புள்ளிவிவரங்களுக்கும் அப்பால் உண்மையான முன்னேற்றத்தை நாம் காணமுடியும்.
அப்போதுதான்
உண்மையான சுதந்திரத்தை யாவரும் கொண்டிருக்க முடியும்.