news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (17.08.2025)

கிறித்தவர்களின் ஆயுதங்களான நம்பிக்கை, உண்மை, நீதி மற்றும் அமைதி ஆகியவை அமைதியானதொரு உலகத்தை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது.”

- ஜூலை 28, சாரணர் இயக்க பங்கேற்பாளர்களுக்குச் செய்தி

மனிதனால் உருவாக்கப்பட்ட அறிவியலும் தொழில்நுட்பமும் மனித மாண்பைக் குறைத்து மதிப்பிடுவற்கு உட்படுத்தக் கூடாது.”

- ஜூலை 29, இணைய வழியில் மறைப்பணியாற்றுவோருக்கான உரை

இயேசுவிடம் மக்களை அழைத்து வரும் பணியில் திரு அவை ஒருபோதும் தோல்வியடையக் கூடாது.”

- ஜூலை 30, புதன் மறைக்கல்வி உரை

நாம் ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்தும் நம்பிக்கை, உற்சாகம், மகிழ்ச்சியானது நம் இதயத்தில் உள்ளவற்றையே வெளிப்படுத்துகின்றன.”

- ஆகஸ்டு 2, இளைஞர்களுக்கான இரவு விழிப்புச் செப வழிபாடு

நமது இதயங்களை அகலமாகத் திறந்து, கடவுளை நமது இதயத்திற்குள் நுழைய அனுமதித்து, முடிவில்லா விண்ணகத்தைப் பார்ப்பது மிகவும் அழகானது.”

- ஆகஸ்டு 3, ஞாயிறு திருப்பலி மறையுரை