news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (31-08-2025)

மனிதர்கள் மீது கடவுள் வெளிப்படுத்தும் விவரிக்க முடியாத அன்பை, புனித கன்னி மரியா நமக்குக் கற்பிக்கின்றார்.”

- ஆகஸ்டு 11, அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா தயாரிப்புச் செய்தி

துரோகத்தின் நிழல் மிகவும் அன்புக்குரிய நம் உறவுகளில் ஊடுருவும்போது, அது நமக்கு நன்கு தெரிந்த ஒரு துன்பமாகிறது.”

- ஆகஸ்டு 13, புதன் மறைக்கல்வி உரை

உயிர்ப்பின் தூய ஆவியார் நம்மிடையேயும் நமக்குள்ளும் அமைதியாக இருந்து, ஒவ்வொரு நாளும் நம் இதயம் இறப்பிற்கு அப்பாற்பட்ட வாழ்வைப் பெற உதவுகின்றார்.”

- ஆகஸ்டு 17, அன்னை மரியா ரொத்தோன்ந்தா திருத்தலத்தில் திருப்பலி

நற்கருணையில் திரு அவை பிறப்பெடுக்கின்றது, நற்செய்திப் பணியில் அது உயிருடன் வாழ்கின்றது.”

- ஆகஸ்டு 17, திருத்தந்தை லியோ அவர்கள் பணியேற்றதன் நூறாவது நாள்

உண்மையாகச் செயல்படுவது ஒரு விலையைக் கொண்டுள்ளது என்றாலும், உலகில் பொய்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள்.”

- ஆகஸ்டு 17, மூவேளைச் செபவுரை