news-details
வத்திக்கான் செய்திகள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ

உரோமையில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்லிம்போமா, அதாவது நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 15 வயது இக்னாசியோ என்னும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த சிறுவனையும், அவனது குடும்பத்தாரையும் சந்தித்து அவர்களுக்காகச் செபித்து, தனது ஆசிரையும் அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இந்தச் சந்திப்பு நிகழ்வு பற்றிக் குறிப்பிட்ட தாய் குளோரியா, “கடவுள் எங்களைக் கைவிடவில்லை என்பதற்கான அடையாளமாகத் திருத்தந்தையின் சந்திப்பைக் கருதுகிறோம்என்று தெரிவித்தார்.