news-details
வத்திக்கான் செய்திகள்
அருளாளர்கள் பிரசாத்தி, அகுதீஸ் உருவ தபால் தலை வெளியீடு

திரு அவையின் புதிய புனிதர்களாக அறிவிக்கப்பட இருக்கும் அருளாளர்கள் ஜார்ஜோ பிரசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் ஆகியோரின் உருவப் படங்களைத் தபால் தலைகளாக வத்திக்கான் தபால் தொடர்புத்துறை  வெளியிட உள்ளது. ஓவியர் ஆல்பர்டோ ஃபால்செட்டி (1878-1951) என்பவரால் வரையப்பட்ட அருளாளர் பியர் ஜோர்ஜோ பிராசாத்தியின் (1901-1925) உருவப்படம், அருளாளர்  கார்லோ அகுதீஸ் (1991-2006) அசிசி, சுபாசியோ மலையில், அவரது இறப்பிற்கு முந்தைய கடைசிப் பயணங்களின்போது எடுத்தப் புகைப்படமான சிவப்பு நிற அரைச்சட்டை அணிந்து, தோளில் ஒரு பையைச் சுமந்து நிற்கும் புகைப்படம் ஆகியன செப்டம்பர் 7 அன்று தபால் தலைகளாக வெளியிடப்படுகின்றன.