news-details
ஆன்மிகம்
மணப்பெண்ணுக்குரிய அன்போடு மரியா கடவுளுக்குப் பதிலளிக்கின்றார்! (Mary response to god with spousal love) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 18

மக்களுடனான கடவுளின் உடன்படிக்கையைக் கொண்டாடுகின்ற திருமண விருந்திற்காக அழைக்கப்பட்ட மனுக்குலம் அனைத்தையும் ஒரு புதியசீயோனின் மகளாகமரியா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

1. “மேன்மைப்படுத்தப்பட்ட சீயோனின் மகளான மரியா (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 55), கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது வான தூதரால் வாழ்த்தப்பட்டு, மனுக்குலத்தின் பிரதிநிதியாகக் கடவுளுடைய மகனின் மனுவுருவாதலுக்காக அவரின் சொந்த இசைவைக் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார்.

வானதூதர் அவரிடம் கூறிய முதல் வார்த்தையே மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பாகும். ‘CHARIEஎன்பதன் அர்த்தம்மகிழ்ந்திடுஆகும். இந்தக் கிரேக்கச் சொல்லானது இலத்தீன் மொழியில்AVEஎன்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்குரியதான இந்தச் சாதாரண சொற்றொடர் வானதூதரின் கருத்தோடும் இந்த நிகழ்வு நடந்த இடத்தின் சூழலமைவோடும் முழுமையாக ஒத்துப்போவதாகத் தெரியவில்லை.

உண்மையில், ‘CHAIREஎன்பது கிரேக்கர்களால் வாழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதொரு சொல்லாடலாகும். ஆனால், சிறப்புமிக்கதொரு சூழலமைவில் கூறப்பட்ட இந்த வார்த்தையானது வழக்கமானதொரு சந்திப்புச் சூழலில் கூறப்படும் வாழ்த்துச் சொல்லிலிருந்து மாறுபட்டதாகும். அதேநேரத்தில், மனித வரலாற்றில் தனிச் சிறப்புடையதொரு செய்தியைக் கொண்டு வருகின்றோம் என்பதை வானதூதர் அறிந்திருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வகையில், ஒரு சாதாரண மற்றும் எளிமையானதொரு வாழ்த்தானது அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாததொன்றாகவே இருக்கின்றது. அதற்குப் பதிலாக, ‘CHAIREஎன்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைக் குறித்துக்காட்டுகின்றREJOICEஅதாவதுமகிழ்ந்திடுஎனும் சொல்லே இந்தச் சிறப்புமிக்க நிகழ்விற்கான பொருத்தமானதொரு சொல்லாகத் தோன்றுகின்றது. குறிப்பாக, கிரேக்கத் திரு அவைத் தந்தையர்கள் தொடர்ச்சியாக இறைவாக்கினர்களின் வாக்குகளைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டுகின்றவாறு, மகிழ்வதற்கானதோர் அழைப்புதான் மீட்பரின்  வருகைக்கான அறிவிப்பிற்கு மிகவும் பொருத்தமான அர்த்தமாக இருக்கின்றது.  ‘மகிழ்ந்திடு; ஏனெனில், ஆண்டவர் அரும்பெருஞ் செயல்களைச் செய்துள்ளார்!’

2. இறைவாக்கினர்களின் வாக்குகளுள் முதலாவதாக இறைவாக்கினர் செப்பனியாவைப் பார்ப்போம். கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் ஏடானது இறைவாக்கினர் செப்பனியாவின் இறைவாக்கோடு ஒத்துப்போவதைக் காட்டுகின்றது: “மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி (செப் 3:14). இங்கே மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பு இருக்கின்றது: “உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி (செப் 3:14,14). ஆண்டவரின் பிரசன்னமும் இங்கே குறிக்கப்படுகின்றது: “இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய் (செப் 3:15). அஞ்சக்கூடாது என்பதற்கானதோர் அழைப்பு இங்கே இருக்கின்றது: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம் (செப் 3:16). இறுதியாக, மீட்பிற்கான கடவுளின் தலையீட்டிற்கான வாக்குறுதியும் இங்கே இருக்கின்றது: “உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்  (செப் 3:17). இவ்வாறு, ஆண்டவர் அவரின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு விரும்பியதால் மகிழ்வதற்கான எல்லாக் காரணங்களும் பெற்றுள்ள மரியாதான்சீயோனின் மகள்என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கான எண்ணற்ற ஒப்பீடுகள் சீரான இடைவெளியில் இருக்கின்றன.

வேறொரு மாறுபட்ட சூழலாக இருந்தாலும், இதேபோன்றதொரு மகிழ்ச்சிக்கானதோர் அழைப்பானது யோவேலின் இறைவாக்கிலும் வருகின்றது: “நிலமே, நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்!... இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கின்றேன் என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள் (யோவே 2:21-27).

3. எருசலேமில் இயேசு நுழைவதோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் செக்கரியாவின் இறைவாக்கும் இங்குக் குறிப்பிடத்தக்கதொன்றாகும் (மத் 21:5; யோவா 12:15). இதில் மகிழ்ச்சிக்கான காரணமாக மெசியாவாகிய அரசரின் வருகையானது பார்க்கப்படுகின்றது: “மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக்குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமல் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க்கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல் முதல் மறு கடல் வரை, பேராறு முதல் நிலவுலகின் எல்லைகள் வரை செல்லும் (செக் 9:9-10).

இறுதியாக, இறைவாக்கினர் எசாயா புத்தகத்தில் மகிழ்ச்சிக்கான அறிவிப்பானது தெய்வீக ஆசிர்வாதத்தின் அடையாளமான அதன் எண்ணற்ற தலைமுறையிலிருந்து தோன்றும் புதிய சீயோனின் எழுச்சியில் கூறப்படுகிறது: “பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள் என்கிறார் ஆண்டவர் (எசா 54:1).

இவ்வாறு, மகழ்ச்சிக்கானதோர் அழைப்பின் காரணங்களாக இம்மூன்றும் இருக்கின்றன. அவரின் மக்கள் மத்தியில் கடவுளின் மீட்புப் பிரசன்னம், மெசியாவாகிய அரசருடைய வருகை மற்றும் பெருந்தன்மையும் வளமையுமிக்க அவரின் மாட்சி இவையனைத்தும்  மரியாவில்  நிறைவேற்றம் பெற்றன. அவை கருத்தரித்தலின் அர்த்தத்தை திரு அவையின் பாரம்பரியத்தினால் வானதூதரின் வாழ்த்தொலிக்கு அடைமொழியாக்கப்பட்டதை நியாயப்படுத்துகின்றன.

மெசியாவினுடைய வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்கான ஒப்புதலைக் கொடுப்பதற்கு மரியாவை அழைத்ததன் வழியாகவும், ஆண்டவரின் தாயாக இருப்பதற்கான மிகவும் உன்னதமான தகுதியை அவளிடம் அறிவித்ததன் வழியாகவும் வானதூதர் அவரை மகிழ்வதற்கு அழைக்கின்றார். இதையே இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் நமக்கு இவ்வாறு கூறுகின்றது: “இறுதியாக, சீயோனின் மாண்புமிக்க மகளான அவரோடு, வாக்குறுதியை எதிர்ப்பார்த்திருந்த நீண்ட காலம் முடிந்து புதிய திட்டம் உருவாக்கப் பெறுகிறது. இத்திட்டத்திலே மனிதரைப் பாவத்தினின்று தம் உடலில் நிகழ்ந்த மறைநிகழ்ச்சிகள் வாயிலாக மீட்க இறைமகன் அவரிடமிருந்தே மனித இயல்பை எடுத்துக் கொண்டார் (இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 55).

4. கிறிஸ்து பிறப்பின் அறிவிப்புப் பற்றிய திருவிவிலியப் பகுதியானது ஆழமானதொரு மகிழ்ச்சிக்குக் கடவுளால் அழைக்கப்பட்ட புதியசீயோனின் மகளில்மரியாவைக் கண்டுகொள்ள நம்மை அழைக்கின்றது. இது மெசியாவின் தாய், உண்மையில் கடவுளுடைய மகனின் தாய் என்கின்ற  அவரின் சிறப்பானதொரு பங்கை வெளிப்படுத்துகின்றதுதாவீதின் மக்களுடைய சார்பாக நின்று அந்தக் கன்னி வானதூதரின்  செய்தியை ஏற்கின்றார். ஆனால், மனுக்குலம் அனைத்தின் சார்பாக அவர் ஏற்றார் என்றும் நாம் கூறலாம். ஏனென்றால், பழைய ஏற்பாடானது தாவீதின் வழிவந்த மெசியாவின் பங்கை எல்லா நாடுகளுக்கும் விரிவுபடுத்துகின்றது (ஒப்பிடுக. திபா 2:8; 71s72d, 8). தெய்வீக எண்ணத்தில், அவருக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிவிப்பானது உலக மீட்பிற்கானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது.

இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியை மரியா வரவேற்கின்றார்!

கடவுளின் திட்டத்தினுடைய இந்த உலகளாவிய பார்வையை உறுதிப்படுத்துவதற்கு சீயோன் மலைமேல் எல்லா மக்களும் கொண்டாடவிருக்கின்ற (ஒப்பிடுக. எசா 25:6) அந்த மாபெரும் விருந்து மற்றும் கடவுளுடைய அரசின் இறுதி விருந்தை அறிவிக்கின்ற அந்த நிகழ்வோடும் (ஒப்பிடுக. மத் 2:1-10) மீட்பானது ஒப்பிடப்படும். அநேக பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு இறைவார்த்தைகளை நாம் நினைவுகூர முடியும்.

சீயோனின் மகள்என்கின்ற வகையில், கடவுள் மனுக்குலம் அனைத்தோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் கன்னியாக மரியா இருக்கின்றார். இந்நிகழ்வில் மரியாவின் பிரதிநிதித்துவப்படுத்தும் பங்கானது தெளிவாக இருக்கின்றது. இந்தச் செயலை ஒரு பெண்ணானவள் செய்கின்றாள் என்பது இங்குத் தனிச்சிறப்புமிக்கதாகும்.

5. புதியசீயோனின் மகள்என்கின்ற வகையில், உண்மையில் மரியா கடவுளோடு திருமண உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்குப் பொருத்தமான ஒருவராக இருக்கின்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் எந்தவொருவரைக் காட்டிலும் மரியாவால் ஆண்டவருக்கு மணவாட்டியின் உண்மையான இதயத்தைக் கையளிக்க முடியும்.

மரியாவைப்  பொறுத்தவரைசீயோனின் மகள்என்பது ஒரு கூட்டுப்பொருள் மட்டுமல்ல, மனிதகுலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபர் மற்றும் கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது இறையன்பின் முன்மொழிதலுக்கு மணமகளுக்கு உரித்தான அன்பினால் அவரின் தனிப்பட்ட பதிலை அளிக்கின்றார்.

இவ்வாறு, முற்றிலும் சிறப்பான வகையில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மகிழ்ச்சியானது  கடவுளுடைய திட்டத்தின் நிறைவு இங்கு முழுமைக்கு வருவதால் ஏற்படும் மகிழ்ச்சியால் அதை அவர் வரவேற்கின்றார்.

மூலம்: John Paul II, Mary responds to God with spousal love, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 8 May 1996, p. 11.