news-details
சிறப்புக்கட்டுரை
திரைக்கலைஞர்களின் அரசியலும் / வருமான அமலாக்கத்துறைகளும்

ஒன்றிய அரசு புகழ்பெற்ற திரைக்கலைஞர்களைத் தன்வசம் வளைக்கக் குறுக்குவழி காண்கிறது. தன் தனி அதிகார வருமானவரி அமலாக்கத்துறை வழி அழுத்தம் கொடுத்துப் பிடிக்கிறது. தனக்கு ஏற்ற திரைக்கலைஞர்களை வளைக்கிறது; காங்கிரஸ், பா... என இருவருமே இச்சதியில் ஒரே குளத்தில் ஊறிய மட்டைகள்தான். கூட்டுப் பங்காளிகள்.

தன் வருமானவரிப் பிரச்சினைகள் தீர்ந்தபின் நடிகர் ரஜினிகாந்த்போல தப்புபவர் ஒருசிலரேதென்னிந்தியாவின் அழகு தேவதைஎன வருணிக்கப்பட்ட நடிகை சௌந்தர்யா பா... கட்சிக்காக 2004-இல் தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்றைய தெலுங்கானாவின் கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் பறந்தார். விபத்து ஏற்பட்டு பரிதாப மரணமடைந்தார். இதுதான் திரைத்துறையினர் மீதான ஒன்றிய அரசுகள் சுமத்தும்  கட்டாய, வலுத்த, பளுவான நெருக்கடி அரசியல்.

மலையாள திரையுலகில் பிரேம் நசீர் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 700 திரைப்படங்களில் நடித்தவர். நடிகை ஷீலாவுடன் மட்டும் கதாநாயகனாக 130 திரைப்படங்களில் நடித்தவர். பிரேம் நசீர் கின்னஸ் சாதனை புரிந்த பெருமைக்குரிய நடிகர். அவரும் அரசியலுக்கு வந்தார். ‘ஏன்?’ என அவரது மகன் ஷாநவாஸ் கௌமுதி தொலைக்காட்சிஸ்ட்ரெய்ட்லைன்என்ற நேர்காணலில் கூறுகிறார்: “என் தந்தை பிரேம் நசீருக்குக் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட அழுத்தம் தரப்பட்டது. அவர் மறுத்து தேர்தல் பிரச்சாரம் மட்டுமே செய்தார். அவருக்கு அதற்காக வருமான வரித்துறை மூலம் நெருக்கடி தரப்பட்டது.”

மலையாள மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் என்பதை நடிகர் பிரேம் நசீர் உணர்ந்திருந்தார். தன் அரசியல் வாழ்வைத் தேர்தல் பிரச்சாரத்தோடு முடித்துக்கொண்டார். கதாநாயகன் என்றால் என்றும் அவர் கதாநாயகன்தான்!

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி! இவரது பெயரைக் கூறினாலே ஆந்திராவே அதிரும். நடிகர் சீரஞ்சீவி 2008-ஆம் ஆண்டுபிரஜா ராஜ்யம்என்ற கட்சியை ஆரம்பித்தார். 2009-ஆம் ஆண்டு ஆந்திரத் தேர்தல் களத்தில் நடிகர் சிரஞ் சீவிக்குக் கூடிய கூட்டமும், அதிரடிப் பிரச்சாரமும் ஆந்திரத் தேர்தல் களமே அதிர்ந்தது. நடிகர் சிரஞ்சீவி  முடிவில் 16% வாக்குகளையும், 18 இடங்களையும் வென்றார். 2011-ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியைக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டார். இவ்வாறாக சிரஞ்சீவி, தன் அரசியல் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொண்டார். நடிகர் சிரஞ்சீவி கூறுகிறார்: “இனி என் வாழ்நாள் முழுவதும் அரசியலிலிருந்து விலகி இருப்பேன்.” நடிகர் சிரஞ்சீவியும் அரசியலுக்கு வர, விடைபெற, வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் தவிர வேறு  அழுத்தங்கள் இல்லை.

வாருங்கள், கன்னட தேசம் காண்போம்: கன்னடத்தில் கொடிக்கட்டிப் பறந்தமூத்த சகோதரர்எனப் பொருள்படும்அண்ணாவ்ருஎன மதிக்கப்பட்டவர் கன்னட சூப்பர் ஸ்டார் இராஜ்குமார். அவருக்குக் காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி கொடுத்த அழைப்பை மறுத்தார். ஆனால், அவரது மகன் சிவராஜ்குமார் 2023-இல் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். காலங்களின் அழுத்தமின்றியும், அரசியல் நடப்பதும்  சிறப்பு. அது மதவெறி அரசியலை முறியடிக்கும் துணிந்த மாநிலங்களின்  போராட்டத்தில் புதிய பக்கங்கள்.

தமிழ்நாடு அரசியலிலும் திரைத்துறையிலும் மறுக்க முடியாத உச்சங்களைத் தொட்டவர் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் எனப்படும் எம்.ஜி.ஆர். அவருக்கும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை நெருக்குதல்கள் தரப்பட்டன. 1971-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தனது வெளிநாட்டுத் திரைப்படப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார். எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவரது வருமானம், சொத்துகள் குறித்து வருமான வரித்துறை நேரில் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கிறது.

மன உளைச்சலிலிருந்த எம்.ஜி.ஆர். அவர்களுக்குபிரதமர் இந்திராகாந்தியைச் சந்தியுங்கள்; உங்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்என்று ஆலோசனை தரப்பட்டது. அவ்வாறே எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்தார். பிரச்சினைகள் தீர்ந்தன. 1972-ஆம் ஆண்டுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்என்ற புதிய கட்சி உருவானது. .தி.மு.. உருவாகப் பல காரணங்களில் இதுவும் ஒன்று என்பது புதைந்த வரலாறு.

தமிழ்நாட்டில் புதிய அரசியல் தலைவராக உருவாகியுள்ள நடிகர் விஜய் அவர்களின் வருமான வரி வரலாற்றையும் புரட்டிப்பார்ப்போம். 2015-ஆம் ஆண்டு முதலே நடிகர் விஜய் அவர்களுக்கு வருமான வரித்துறையின் அழுத்தங்கள் ஆரம்பமாகி விட்டன. தமிழ்நாடு அரசியலில் நடிகர் ரஜனிகாந்திற்கு  மாற்றாக நடிகர் விஜய் அவர்களை ஆர்.எஸ். எஸ். அன்றே குறிவைத்துவிட்டது. மெல்லக் கொடுத்த அழுத்தங்கள் 2020-இல் உச்சம் பெற்றது. நெய்வேலியில்மாஸ்டர்திரைப்படப்  படப்பிடிப்பு நடந்தது. விஜய் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த வருமான வரித்துறையினர்விசாரணைக்கு வரவேண்டும்என விஜய் அவர்களைக் கட்டாயப்படுத்தி, படப்பிடிப்பை இடைநிறுத்தம் செய்தனர். வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்கள். பனையூர் பங்களாவில் அவரது குடும்பத்தாரின் சொத்துகள், உள்நாடு-வெளிநாடு என வகைப்படுத்தப்பட்ட விவரங்களைக் காட்டி கேள்விகள் அடுக்கினர். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் விசாரணை வளையத்துக்குள் உட்படுத்தப்பட்டார். 24 மணி நேரத்திற்குக்  கிடுக்குப் பிடி விசாரணை நீண்டது.

நடிகர் விஜய் மீதான வருமான வரித்துறை விசாரணையை நடத்தியவர் வருமான வரித்துறை ஆணையர் அருண்ராஜ். இவர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. முன்பு அவர்தான் நடிகர் விஜய் அவர்களுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்குகிறார் எனக் கிசு கிசுக்கப்பட்டது. அவர் தனது வருமான வரித்துறைப் பதவியை விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு நடிகர் விஜய்யின் கட்சியில் சேர்கிறார். உடன் அவர் .வெ..வில் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளராக நியமனம் பெறுகிறார். பின்னாள்களில் நடிகர் விஜய் அவர்களின்  வருமான வரிக்கணக்குகளில் எந்தத் தவறுகளும் நடக்கவில்லை எனப் புனிதம் பெறுகிறார்.

இதனிடையே புதிய கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஜய் அவர்களுக்குத் தேர்தல் ஆணையத்தில், புதிய கட்சி அங்கீகாரம் பெற புஸ்ஸி ஆனந்துடன் உடன் சென்றவர் பிரகாஷ் எம். சுவாமி. இவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக வெளிச்சம் பெற்றவர். அவருக்கும், நடிகர் விஜய் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தாலும் நடிகர் விஜய் அவர்களுக்கு எந்தக் கேள்வியும் இல்லாமல் உடனே கட்சி அங்கீகாரம் கிடைக்கிறது. நடிகர்களின் அரசியலில் திரைமறைவு ஆர்.எஸ்.எஸ். நோக்கங்களை நிறைவேற்ற வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும்  பா...வால் முடுக்கி விடப்படுகின்றன.

ஒரு குடியாட்சியில் எந்தத் தொழில் செய்வோரும், எந்தப் பணியாற்றுவோரும், தன் பங்களிப்பைத் தரலாம். அவர்கள் தேர்தல் களம் காண்பது நாட்டு மக்கள் நலனுக்கா? அல்லது தங்கள் வருமான வரி, அமலாக்கத்துறை  பிரச்சினை தீரவா? என்ற சுயநல அரசியலை அடையாளம் காண்பதே நம் சனநாயகக் கடமை என்போம். மதவாத ஒன்றிய அரசின் முகங்களை, முகமூடிகளை முறியடிப்போம்.