திருப்பீடத்தின் விண்வெளி ஆய்வக இயக்குநராகத் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இயேசு சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் காய் கன்சோல்மேக்னோ அவர்களின் பணிக் காலம் வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவுபெறும் நிலையில், அதன் புதிய இயக்குநராக இந்தியாவின் கோவாவைச் சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி அறிஞரான அருள்பணி. ரிச்சர்டு அந்தோணி டி சூசா சே.ச. அவர்கள், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். ‘Max Planck’ நிறுவனம் மற்றும் மெச்சிகன் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பால்வெளி அண்டத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.