இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டக்குழுவில் ‘ஆசிய ஜோதி’ ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய நாட்டின் மாபெரும் மனிதராக வாழ்ந்தவர். பெரும்பான்மையினர், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள் என்று கூறினார். ஆகவே, சிறுபான்மையினர் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் உறுதி செய்தார்.
சிறுபான்மையினர்,
கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகப் பல ஆண்டு காலம்
இருந்தார்கள். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகப் பல இடங்களில் பாதிக்கப்பட்டு
வருகின்ற சிறுபான்மையினருக்கு எதிரான அநீதியான குரல் வலுத்து வருகிறது. அரசியல் அமைப்புச் சட்டம் 25-வது பிரிவு சிறுபான்மையினருக்கு மனச்சுதந்திரம், மதச்சுதந்திரம் அளிக்கிறது. இந்தியக் குடிமகன் விரும்பும் சமயத்தைத் தழுவ, வழிபட மற்றும் அச்சமயத்தைப் பரப்ப உரிமை அளிக்கிறது. ஆனால், இன்றைய நிகழ்வுகள் உரிமையை முற்றிலுமாகப் பறிப்பதாக உள்ளன.
பெரும்பான்மையான
இந்து நண்பர்கள் இந்துத்துவக் கொள்கையை ஏற்பதில்லை. இந்துகள் என்ற பெயரில் சிறு குழுவினர் அல்லது இந்து சிறுபான்மையினர் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள், குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
அண்மையில்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மனத்தை உருக்கும் நிகழ்வை அனைவரும் கண்டனம் செய்கின்றனர். ‘சிஸ்டர்ஸ் ஆப் இமாக்குலேட் கன்ஸபசன்’
சகோதரிகள் வந்தனா பிரான்சிஸ், பிரீத்தி மேரி மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர். இரயில்வே நிலையத்தில் மூன்று ஏழைப் பெண்களை ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்வதற்கு அழைத்துச் செல்லக் காத்திருந்தார்கள். அங்கு சுக்மன் மண்டாவி என்பவர் மூன்று பெண்களை அழைத்து வரும்போது பார்த்த சங்கீகள் பஜ்ரங்கால் தொண்டர்கள், முக்தி வாகினி பெண்களையும் அழைத்து வந்து பிரச்சினையை உருவாக்கினார்கள். இரயில்வே போலிஸ் ஸ்டேஷனில் மூன்று பெண்களை விற்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்தார்கள். அவர்களை மதமாற்றம் செய்யப் போகிறார்கள் என்று பொய்யான FIR பதிவுச் செய்து
சத்தீஸ்கர் நீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள். அருள்சகோதரிகள், பெண்கள் அவர்களின் பெற்றோர் சொன்ன உண்மைகளைப் பதிவு செய்யவில்லை. பெற்றோர்கள் கூறுவது அவர்கள் ஏற்கனவே கிறித்தவர்களாக இருக்கிறார்கள். தங்கள் சம்மதத்துடன் பெண்களை வேலை செய்வதற்காக அழைத்து செல்கிறார்கள். ஏழைகள் எங்களுக்கு இது பெரிய சேவையாகும் என்று சொன்னதைக்கூட பதிவு செய்யவில்லை. அருள்சகோதரர்களைச் சிறையில் தள்ளினார்கள். சத்தீஸ்கர் முதலமைச்சர் தண்டனையை நியாயப்படுத்தினார். பா.ச.க
தலைவர்கள் வழக்குத் தொடர்ந்தபோதும் இந்தியா எங்கும் போராட்டம் வலுத்து அருள்சகோதரிகள் கடையில் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்துத்துவ
கொள்கையை இந்து சிறுபான்மையினராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் முகமான பா.ச.க
தூக்கிப்பிடிக்கிறது.
பரிவாரங்கள் சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்களைத் தாக்குகின்றனர் 1992 பாபர் மசூதி இடிப்பு 2002 குஜராத் இஸ்லாமியருக்கு எதிரான கலவரம் மற்றும் படுகொலைகள் 2008, காந்தமால் ஒரிசா மாநிலத்தில் கிறித்தவர் படுகொலையைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில் மட்டும் 824 கிறித்தவர் தாக்கப்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. கிறித்தவச் சமூகம் மக்கள்நல பணிகளை ஆற்ற அயல்நாட்டு உதவி பெறும் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. இவ்வாறு, சிறுபான்மையினருக்கு எதிரான குரல் வன்முறை சம்பவங்களில் முடிகிறது.
சிறுபான்மையினர்
உரிமைகள் பறிக்கப்படுகிறபோதும் பாதிக்கப்படுகிறபோதும் பொது சமூகம் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இடதுசாரிக் கட்சிகள் உரிமைகளைப் பாதுகாக்கக் களத்தில் போராடுகின்றனர். கிறித்தவச் சமூகம் முழுவதும் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டு நீதியை நிலைநாட்டுவது அடிப்படைக்
கடமையாகும்.