news-details
வத்திக்கான் செய்திகள்
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

அண்மையில் ‘Streets of Fear: Freedom of Religion and Belief in 2024/25’ என்ற  அறிக்கையை  வெளியிட்ட பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (HRCP), கிறித்தவர்கள் மற்றும் இந்துகளுக்கு எதிரான வன்முறைகள் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளது. “சிறுபான்மையினருக்கு எதிரான அடிப்படைப் பாகுபாட்டைத் தவிர்க்க பாகிஸ்தான் தவறிவிட்டது; உலகம் ஒருங்கிணைப்பு நோக்கிச் செல்லும் வேளையில், நாமோ சகிப்புத்தன்மையற்ற, கொடூரமான சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்என்றுதேசிய நீதியும் அமைதியும்ஆணையத்தின் (NCJP) துணை இயக்குநர் அட்டாவுரெஹ்மான் சமன் தெரிவித்துள்ளார்.