விடுதலை நாடும் வீசும் சனநாயகக் காற்றும் போராட்டங்கள் இன்றிப் பிறப்பதில்லை. உலக வரலாறுகளும் இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளும் உணர்த்தும் பேருண்மை இது. தனி மனிதன், சமூகம், நாடு என்னும் முத்தளங்களிலும் யாவருக்கும், அடிப்படை உரிமைகளும் வாழ்வாதாரத் தேவைகளும் கிடைக்கப்பெறுவது பல வேளைகளில் போராட்ட வழிமுறைகளில்தான். இக்கூடும், வீடும், நாடும் விடுதலை வானில் சிறகடிக்க, போராட்டச் சிறகுகள் விரிக்கப்பட வேண்டும் என்பது உண்மையாகிப் போனது.
“ஆபத்துகளை எதிர்கொள்ள விரும்பாதவர்கள் அரிதாகவே வெற்றி பெறுகிறார்கள்” என்றனர்
நம் முன்னோர். எதிர்வரும் தடைகளைத் தகர்த்து மாற்றம் என்னும் இலக்கை முன்வைத்து மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் யாவும் வெற்றிகளையே உறுதி செய்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இளையோர் முன்னெடுக்கும் போராட்டங்கள் வீரியமிக்கதாகி வெற்றிகொண்டதாகவே வரலாறு பதிவு செய்திருக்கிறது. நெப்போலியன் ஹில் என்பவருடைய, “Victory is always possible for the person who refuses to stop
fighting” எனும்
கூற்று சனநாயக மாற்றத்திற்குத் தவிர்க்க முடியாத பல போராட்டங்கள் அவசியம்
என்பதையே வலியுறுத்துகிறது.
அண்மைக்
காலங்களில் நிலவும் நேபாளத்தின் அசாதாரண சூழ்நிலைகளை அறிய, அதன் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.
இந்திய
- கங்கைச் சமவெளியின் வடபகுதியில், இந்திய எல்லையில் உறவு கொண்டுள்ள அண்டை நாடான நேபாளம், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தளம். ஏறக்குறைய இரண்டு கோடியே 65 இலட்சம் மக்கள் வாழக்கூடிய இந்த நிலப்பரப்பில், இந்துகள் 81%, பௌத்தர்கள் 9%,
இஸ்லாமி யர்கள் 4%, பிராந்தி மக்கள்
3%, கிறித்தவர்கள் 1.5% வாழ்ந்து வருகின்றனர். உலகிலேயே
உயரமான மலைகளைக் கொண்டுள்ள ஒரு நாடு இது; உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் தீபத்துடனான எல்லையில் காணப்படுகிறது. உலகின் முதல் 10 உயரமான மலைகளில் எட்டு மலைகள் இங்குதான் அமைந்திருக்கின்றன. இமயமலையின் அடிவாரத் தில் இத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாடு சந்தித்தப் போராட்டங்களும் இயற்கைச் சீற்றங்களும் ஏராளம் ஏராளம்!
14-ஆம்
நூற்றாண்டில் காட்மாண்டு, பதான், பக்தபூர் எனப் பிரிந்து கிடந்த நிலப்பரப்பை, 1768-இல் பிரிதிவி நாராயணன் ஷா என்னும் அரசரால்
வென்றெடுக்கப்பட்டு, நேபாள நாடு நிறுவப்பட்டது. இந்த மன்னனின் படைத் தலைவராக இருந்த ஜங் பகதூர் இராணா, மன்னரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, 1846 முதல் 1951 வரை ஷா வழி மரபின்
மன்னர்களைக் கைப்பாவையாக வைத்துக்கொண்டு அவரும் அவரது வழி மரபினரும் ஆட்சி செய்து வந்துள்ளனர்.
மீண்டும்
ஷா வழிமரபினர் 1951 முதல் 2008 வரை ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு மக்கள் போராட்டங்கள் காரணமாக, 1991-இல் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, முதல் சனநாயக தேர்தல் கண்டபோது, அங்கு நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது; கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமரானார். மன்னரும் பிரதமரும் கொண்ட “அரசியல் அமைப்புச் சட்ட முடியாட்சியாக” அந்நாடு
விளங்கியது. நன்கு வரையறுக்கப்படாத அதிகாரங்களைத் தம் வசம் வைத்துக் கொண்ட மன்னராட்சி முறையை ஒழிப்பதற்காக நேபாள உள்நாட்டுப் போர்களும் மாவோயிசவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களும் இம்மண்ணில் ஏராளம்.
2015 செப்டம்பர் 20 அன்று,
நேபாள அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பிறகு, இராம் பரன் யாதவ் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார்; சமயச்சார்பற்ற “சனநாயகக் கூட்டாட்சிக் குடியரசு”
என அந்நாடு அறிவிக்கப்பட்டது.
பல்வேறு
போராட்டங்களைச் சந்தித்த நேபாளம், பொருளாதார வளர்ச்சியின்றி உலகில் மிகவும் ஏழை நாடுகளின் பட்டியலில் இன்று முன் நிற்கிறது. மக்கள்தொகையில் 38 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறையையே நம்பியிருக்கும் இந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்து கிடக்கிறது.
ஒவ்வொரு
நாட்டிலும் பொருளாதாரச் சீரழிவிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது ஊழல். நேபாளம் இதில் விதிவிலக்கல்ல. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மேற்கொண்ட கூட்டணி ஆட்சியில், நேபாள பிரதமராக கே.பி. சர்மா
ஓலி பதவி ஏற்றதிலிருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இத்துடன்,
செப்டம்பர் 4 அன்று, 26 சமூக வலைதளச் செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்தது. You tube,
இன்ஸ்டாகிராம், facebook உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பதிவு செய்யப்படாததால் அவற்றைத் தடை செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் சமூக வலைதளங்களைத் தணிக்கைக்கு உட்படுத்தவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகப் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் குறிப்பாக, இளையோறும் எண்ணினார். “சமூக ஊடகத்தளங்களைத் தடை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை; அவற்றை முறைப்படுத்துவதே அரசின் நோக்கம்” என அரசு தெரிவித்ததுடன்,
இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் சமூக வலைதளச் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும் அரசு அறிவித்தது.
சமூக
வலைதளச் செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் உறுதியளித்தது. அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க கோரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் வீதிகளில்
இறங்கி, போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெருந்திரளான இளைஞர்கள் தேசியக்கொடியையும் அரசுக்கு எதிரான பதாகைகளையும் கையில் ஏந்தி முழக்கமிட்டது போராட்டத்தின் தீவிரத்தை வெளிக்காட்டியது.
‘நே’ என்றால்
(புனித), ‘பாள்’ என்றால்
(குகை) எனப் பொருள்படும் வகையில் “புனித குகை”யாக விளங்கிய இந்நாடு, இன்று வன்முறை தீவிர மடைந்து, “பெரும் புகை”யால் சூழ்ந்திருக்கிறது. நாடு கலவரப்பூமியாய்ப் போர்க்களமாய்க் காட்சியளிக்கிறது.
நேபாள
அரசுத்துறைச் செயலகங்கள், கட்சி அலுவலகங்கள், பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் என யாவும் தீயிடப்பட்டதும்,
போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டதும், இளையோரின் கோபத்தையும் ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது.
இலங்கை,
வங்கதேசம், நேபாளம் என இந்தியாவைச் சுற்றி
இருக்கும் அண்டை நாடுகள் யாவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும் கருத்துரிமை தடைக்கு எதிரான போராட்டத்திலும் வீரியம் கொண்டு, அது மக்கள் போராட்டமாக, இளையோர் முன்னெடுக்கும் உரிமைக்கான போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. இந்த அதிர்வலைகள் நாளை இந்தியாவிலும் இளையோர் மத்தியில் புதிய இந்தியா படைக்கக் கருத்துரிமை பிறக்க எழுச்சிக்கொள்ளச் செய்யும் என்ற நல்லெண்ணமும், அதே வேளையில் ஐயமும் நம் கண்முன் நிற்கிறது. ஆயினும், ஒன்றிய மாநில ஆட்சியாளர்கள் ஊழல் தவிர்த்து ஆட்சி செய்யவும், இளையோரின் வளமான தொழில்நுட்பத் திறனைப் பல தளங்களில் பயன்படுத்திக்கொள்ளவும்
முன்வர வேண்டும்.
ஊழல்
நிறைந்து, மக்கள் உரிமை இழந்து வாழும் நேபாள அரசியல் சூழ்நிலையைக் காணும்போது,
கொலைமேற்கொண்
டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை
செய்தொழுகும் வேந்து - (குறள் 551).
என்னும்
குறளில், ‘மக்களை வருத்தி அலைக்கழிப்பதையே தொழிலாகக் கொண்டு தீமைகள் செய்து ஆண்டு வரும் அரசன், கொலைத்தொழில் செய்வோரைவிடக் கொடியவன் என்று கருதப்படுவான்’ என்னும்
வள்ளுவரின் வாக்கே நம் எண்ணத்தில் எழுகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்