கபிரியேல் தூதர் கன்னி மரியாவிடம் கூறிய ‘அருள் நிறைந்தவளே’ என்ற வார்த்தைகளின் ஆழத்தைத் திரு அவையின் சிந்தனையானது பின்வருமாறு விவரிக்கின்றது:
1. மரியா
‘அருளால் நிறைந்தவர்’ என்பது
‘பாவத்தின் எல்லாக் கறைகளிலிமிருந்தும் விடுவிக்கப்பட்டவர் மற்றும் முற்றிலும் புனிதமானவர்’, ‘கருவான
முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்தார்’, ‘தனிப்பட்டதொரு
புனிதத்துவத்தின் சிறப்புகளால் அவருடைய கருத்தரித்தலின் தொடக்கத்திலிருந்தே வளமைப்படுத்
தப்பட்டார்’ என்று
அங்கீகரிக்கப்பட்டிருந்தது
(இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56).
இந்த
அங்கீகாரத்திற்கு ‘மரியா அமல உற்பவி’ என்ற கோட்பாட்டின் (Dogma of immaculate
conception) அறிவிப்பிற்குக் காரணமான கோட்பாட்டு அடிப்படையிலான சிந்தனையின் நீண்டதோர் உருவாக்கம் தேவைப்பட்டது. கிறிஸ்து பிறப்பில் வானதூதரால் மரியாவிடம் கூறப்பட்ட ‘அருளின் முழுமையினால் உருவாக்கப்பட்டவர்’ என்ற
சொல்லாடலானது முன்னறிவிக்கப்பட்ட அவருடைய தாய்மையின் பொருட்டு நாசரேத்தூர் இளம் பெண்ணுக்குக் காட்டப்பட்ட சிறப்புமிக்கக் கடவுளின் கருணையைக் குறிக்கின்றது. இருப்பினும், இது மரியாவில் இருந்த
தெய்வீக அருளின் தாக்கத்தையே நேரடியாகக் குறிக்கின்றது. மரியா இயல்பிலேயே அருளால் என்றும் நிறைக்கப்பட்டிருந்தார் மற்றும் அதனாலேயே தூயவரானார். ‘Kecharitoméne’ என்ற
அடைமொழியானது மிகவும் ஆழமானதோர் அர்த்தத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது பற்றிய திரு அவையின் புரிதலை ஆழப்படுத்துவதில் தூய ஆவியானவர் தொடர்ந்து செயல்படுத்துகின்றார்.
புனிதப்படுத்தும்
அருளானது
மரியாவை
ஒரு
புதுப்படைப்பாக்கியது
2. ‘அருளாள் நிறைந்தவரே’ என்கின்ற
வானதூதரின் வாழ்த்தொலியானது கிட்டத்தட்ட மரியாவின் பெயராகவே பயன்படுகின்றது. கடவுளின் பார்வையில் இதுதான் மரியாவின் பெயராகும். செமிடிக் இனத்தவரின் வழக்கத்தில் (Semitic) ஒரு
நபரின் அல்லது பொருளின் பெயரானது எதைக் குறித்துக் காட்டுகின்றதோ, அதுவே அந்த நபரின் அல்லது பொருளின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகின்றது. அதன்
விளைவாக, ‘அருளால் நிறைந்தவர்’ என்கின்ற
இந்தச் சிறப்புச் சலுகையானது அருளினாலும் கருணையினாலும் உருவாக்கப்பட்டவர் என்று வரையறுக்கப்படும் அளவுக்கு நாசரேத்தூர் இளம் பெண்ணின் ஆளுமையில் மிக ஆழமானதொரு நிலையையே காட்டுகின்றது.
அதேநேரத்தில்,
மரியா “தூய ஆவியாரால் வடிவமைக்கப்பட்டவர்’ மற்றும்
‘ஒரு புதிய உயிரினமாக உருவானவர்’
என்பதை உறுதிப்படுத்தி, திரு அவைத் தந்தையர்கள் அவரை ‘முற்றிலும் புனிதமானவர்’ என்று
அழைத்தபோது, இந்த உண்மையைக் குறிப்பிட்டதாக இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மீண்டும் நினைவுகூர்கின்றது” (இறைத்
திட்டத்தில் திரு அவை, எண். 56).
தனிப்பட்ட
புனிதத்துவத்தை உருவாக்கும் ‘புனிதப்படுத்தும் அருள்’ என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்ட அருளானது, மரியாவில் புதிய
படைப்பைக் கொண்டுவந்தது. மேலும், அவரைக் கடவுளின் திட்டத்திற்கு முழுமையாக இணங்கச் செய்தது.
3. இவ்வாறு,
கோட்பாட்டுச் சிந்தனையானது Doctrinal reflection
மரியாவுக்கு ஒரு முழுமையான புனிதத்தன்மையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அது முழுமையானதாக இருக்க அவருடைய வாழ்க்கையின் தொடக்கத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும் எனலாம்.
கி.பி. 550 முதல்
650 வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனத்தின் லிவியாஸ் நகரத்தில் வாழ்ந்த தெயோடோக்னோஸ் என்பவர் முதல் தூய்மையை (original
purity) நோக்கி தனது சிந்தனையை நகர்த்துகின்றார். மரியாவை ‘தூயவர்’ மற்றும் ‘அழகின் முழுமை’,
‘களங்கமற்றவர்’ மற்றும்
‘மாசற்றவர்’ எனச்
சித்தரித்து, அவரின் பிறப்பிலும் இந்த வார்த்தைகளை அவர் குறிப்பிடுகின்றார்: “மாசற்ற மற்றும் களங்கமற்றவரான அவர் ஒரு கெருபீம் (cherubim) போல பிறந்தார்”(Panegyric for the feast of the
Assumption, 5/6).
முதல்
மனிதனின் படைப்பை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகின்ற இந்தச் சொல்லாடலானது அதாவது, பாவத்தால் கறைப்படுத்தப்படாமல் ஒரு களிமண்ணால் உருவாக்கப்பட்டார் என்பது, மரியாவினுடைய பிறப்பின்
அதே பண்புகளைக் குறித்துக் காட்டுகின்றது: கன்னியின் பிறப்பும் ‘தூய்மையானதாக மற்றும் மாசற்றதாக’
அதாவது, எந்தவொரு பாவமும் அற்றதாக இருந்தது. மரியாவை ஒரு தேவதையுடனான ஒப்பீடென்பதும் அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே மரியாவின் வாழ்வு குறித்துக்காட்டுகின்ற தலைசிறந்த பண்புகளை வலியுறுத்துகின்றது.
தெயோடோக்னோஸின்
இந்த உறுதியான நிலைப்பாடானது, ஆண்டவருடைய தாயின் மறையுண்மை பற்றிய இறையியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கதொரு நிலையைக் குறிக்கின்றது. கிரேக்க மற்றும் கிழக்கத்திய திரு அவைத் தந்தையர்களும் கருவுறுதலுக்கு முன்போ (St. Gregory Nazianzen,
Oratio 38, 16) அல்லது கருவுறுதலின்பொழுதோ (St. Ephrem, Severian of Gabala, James of Sarug) கடவுளின் அருளினால் மரியாவில் கொண்டுவரப்பட்ட அந்தப் புனிதமாக்குதலை ஒத்துக் கொள்கின்றார்கள்.
4. லிவியாஸ்
நகரத்தில் வாழ்ந்த தெயோடோக்னோஸ், மரியாவினுடைய வாழ்வின் தொடக்கத்திலி ருந்தே அவரிடம் தூய்மை இருந்திருப்பதை விரும்புவதாகத் தெரிகின்றது: “மனுக்குலமானது அதன் தொடக்கத்திலிருந்த அந்த அழகை மரியாவின் அமல உற்பவப் பிறப்பில் இன்று அதன் நிறைவை அடைகின்றது. உண்மையில், மீட்பரின் தாயாவதற்காக முன்குறித்து வைக்கப்பட்டவர் முற்றிலும் தூயவராகவும், மாசற்ற தொடக்கத்தைக் கொண்டவராகவும் இருக்க வேண்டியதாயிற்று. மனுக்குலத்தின் இயல்பான ஈர்ப்பையும் சிறப்பையும் பாவத்தினால் ஏற்பட்ட குற்ற உணர்வானது மங்கச்செய்தது. ஆனால், அழகில் சிறந்தவரான அந்தத் தாய் பிறந்தபொழுது இந்த இயற்கையானது மரியாவில் அதன்
தொடக்ககாலச் சிறப்பைத் திரும்பவும் பெறுகின்றது. மேலும், உண்மையில் கடவுள் நிலைக்குப் பொருத்தமான மிகச்சிறந்ததொரு மாதிரிக்கு ஏற்றாற்போல உருவமைக்கப்படுகின்றது. நம்முடைய இயல்பின் மறுமலர்ச்சியானது இன்று தொடங்குகின்றது. மேலும், முழுமையாகத் தெய்வீக உருமாற்றத்திற்குட்பட்ட பழைய உலகானது இரண்டாவது படைப்பின் முதற்கனியைப் பெறுகின்றது.”
தொடக்கத்திலிருந்த
அந்தக் களிமண்ணின் உருவத்தை மீண்டும் பயன்படுத்தி அவர் இவ்வாறு கூறுகின்றார்: “கன்னி மரியாவின் உடலானது கடவுளால் பண்படுத்தப்பட்ட நிலம் போன்றதாகும்; கிறிஸ்துவால் தெய்வீகப்படுத்தப்பட்ட ஆதாமின் முதற் கனியாகும்; உண்மையில் முந்தைய அழகையொத்த உருவம், இறை ஓவியரால் உருவாக்கப்பட்ட களிமண்ணாவார்.”
மரியாவின் தொடக்கநிலைத்
தூய்மையே
மீட்பின்
தொடக்கமாகும்
இவ்வாறாக,
மரியாவின் தூய்மையான அமல உற்பவமானது புதிய படைப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகின்றது. இது மனுக்குலமனைத்திற்கும் கடவுளால் விரும்பப்பட்ட அபரிமிதமான அருளின் காலத்தைச் சுட்டிக்காட்டுகின்ற கிறிஸ்துவின் தாயாவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கும் வழங்கப்பட்ட தனிப்பட்ட சிறப்புரிமை பற்றியதாகும்.
மேலும்,
8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் நகரத்துப் புனித ஜெர்மானுஸ் மற்றும் புனித ஜான் தமாசேனே போன்றவர்கள் மீண்டுமாக இந்தக் கோட்பாட்டைக் கையிலெடுத்து மரியாவின் தொடக்கநிலைத் தூய்மையையே உலக மீட்பின் தொடக்கமாகக் காட்டி அதனை வெளிப்படுத்து கின்றது. இந்த வகையில், திரு அவையின் பாரம்பரியமானது வானதூதரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட ‘அருளால் நிறைந்தவரே’ என்பதன்
உண்மையான அர்த்தத்தைத் தனதாக்கி, அதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. மரியா புனிதப்படுத்துகின்ற அருளின் நிறைவாக இருக்கின்றார். அதுவும் அவரின் தொடக்கம் முதலே அவ்வாறு இருக்கின்றார். எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதத்தின்படி இந்த அருளானது, கிறிஸ்துவில் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது (எபேசியர் 1:6).
மரியாவின்
தொடக்கநிலைத் தூய்மையானது அளவிட முடியாத கொடையின் மாதிரியையும், உலகில் கிறிஸ்துவின் அருளினைப் பகிர்ந்து வழங்குவதையும் குறிக்கின்றது.
மூலம்:
John Paul II,
Mary was conceived without original sin, in «L’Osservatore Romano», Weekly
Edition in English, 22
May 1996, p. 11.