2019-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை இறைவார்த்தை ஞாயிறாகக் கொண்டாட நம் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் 2025, சனவரி 26 அன்று ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறை “உமது வார்த்தையால் நான் நம்பிக்கை கொள்கிறேன்” (திபா 119:74) என்ற மையக்கருத்தில் உலகம் முழுவதும் கொண்டாடினோம். தமிழ்நாடு திரு அவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புகளில் ஒன்றான திருவிவிலிய மாதம் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. திருவிவிலிய மாதத்தில் தமிழ்நாடு திருவிவிலிய அருள்பணிக் குழுவின் இணைந்து திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதலில் எல்லா மறைமாவட்டங்கள், பங்குகள், கிளை ஆலயங்கள், துறவற இல்லங்கள், பயிற்சியகங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் இந்த மாதம் மிக நேர்த்தியாகச் சிறப்பிக்கப்படுவது தமிழ்நாடு திரு அவையின் தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.
செய்தி
ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகை ஊடகங்கள், இணையவழி ஊடகங்கள், சமூகத் தொடர்பு ஊடகங்கள் வழியாகவும், நேரடி வகுப்புகள் மற்றும் பல்வேறு திருவிவிலியப் போட்டிகள் மற்றும் பரிசளிப்புகள் வழியாகவும் எல்லா மறைமாவட்டங்களிலும் திருவிவிலிய மாதமாகச் செப்டம்பர் மாதம் சிறப்பிக்கப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியது; பயன் தரவல்லது.
2025-ஆம் ஆண்டு
யூபிலி ஆண்டை எதிர்நோக்கின் திருப்பயணியாகக் கொண்டாடும் நமக்கு இந்த ஆண்டின் மையப்பொருளான (திபா 119:74) கிறித்தவ வாழ்வின் நோக்கத்தையும் நம் தொடர் பயணத்தையும் நமது இலக்கையும் தெளிவுபடுத்துகிறது (திபா 119). ஆண்டவரின் திருச்சட்டத்தின் மேன்மையையும், அதில் நாம் கொள்ள வேண்டிய ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் அதன் அடிப்படையிலான எதிர்நோக்குப் பயணத்தையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது (திபா
119:43,49,74,81,95, 114,116,14,7, 166) என
இந்தத் திருப்பாடலின் (119) பல இடங்களில் கிறித்தவ
நம்பிக்கை வாழ்வு என்பது ஆழமான, பற்றுறுதிமிக்க நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அன்பும் இணைந்து வாழ்வு என்பதை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. எடுத்துக்காட் டாக “உன் நீதிநெறிகளின்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்”(திபா
119:43) எனவும் நிறைவாக “உன் கட்டளைகளை விரும்புகிறேன்” (119:127) எனவும்
மொழிகிறது. இதன் அடிப்படையாக எதிர்நோக்கு வாழ்வியல் என்பது “காத்திருப்பது மட்டுமல்ல; எதிர்நோக்கி இருப்பது மட்டுமல்ல; நாம் நம்பும் கடவுளின் நீதிநெறிகளைச் செயல்படுத்துவதே உண்மையான கிறித்தவ நம்பிக்கை வாழ்வு” என் பதைத் தெளிவுபடுத்துகிறது.
தமிழ்நாடு
திரு அவை திருவிவிலியத்தை இலட்சக்கணக்கில் அச்சடித்து அதனை எல்லா இடங்களுக்கும் மக்களுக்கும் வழங்கியுள்ளது என்பது நமக்குப் பெருமைதான். ஆனால், திருவிவிலிய மாதத்தின் நோக்கம் அது மட்டுமல்ல, கடவுளின் நீதிநெறிகளை நம்புகின்ற தமிழ்நாடு திரு அவை அதன் பணியாளராக மாற வேண்டும், நம்புவதை அறிவிக்க வேண்டும், அவற்றைச் செயல்படுத்த வேண்டும், செயல்படுத்தும் கடவுளின் நீதிநெறிகளை மட்டுமே உலகிற்கு அறிவிக்கவேண்டும். வெற்று அறிவிப்புகள் வேண்டாம். வாக்கு உயிர் பெறட்டும், நம்மிடையே குடிகொள்ளட்டும்.