news-details
சிறப்புக்கட்டுரை
யார் இந்தப் புனிதை? (தூய குழந்தை இயேசுவின் தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா)

1873-இல் பிறந்து, 15 வயதில் கார்மேல் துறவற சபையில் நுழைந்து, 9 ஆண்டுகள் மட்டுமே துறவியாக வாழ்ந்து, 24 வயதிலே 1897-இல் இறைவனடி சென்ற இளங்கன்னி, சிறுமலர், சின்ன ராணி! பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள் பாசமழையில் நனைந்து, அன்பிலே குளித்து, இறை ஒன்றிப்பில் இணைத்துக்கொண்ட குழந்தை இயேசுவின் மற்றும் திருமுகத்தின் தெரேசா!

லூயிஸ்-செலியே இவர்களின் புதல்வியாய் உதித்து, தன் புனிதத்தின் வழியாகத் தன் பெற்றோரையே தூயவர்களாக்கிக் குடும்பத்தையே புனிதமாக்கிய  இதய ராணி! தன் மறைந்த தியான வாழ்வால் உலகிற்கே நற்செய்தி அறிவித்து மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியாகி, தன் சிறுவழி ஆன்மிகத்தால்திரு அவையின் மறை வல்லுநர்என்று திரு அவையின் இதயமாக உலகம் போற்றும் நாயகி!

இவர் ஒரு கார்மேல் துறவி. பிரான்ஸ் நாட்டிலே லிசியு நகர் கார்மேல் மடத்தில் வாழ்ந்தவர். தூய தெரேசாவின் பிறப்பின் 150-ஆம் ஆண்டு (2023), அருளாளர் பட்ட 100-ஆம் ஆண்டு (2023) மற்றும் புனிதர் பட்ட 100-ஆம் ஆண்டு (2025) என உலகம் முழுவதும் கார்மேல் துறவற சபைகள் இணைந்து அகமகிழ்ந்து கொண்டாடுகின்றன.

பிறப்பு: ஜனவரி 2, 1873

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 29, 1923

புனிதர் பட்டம்: மே 17, 1925

அகில உலகக் கார்மேல் துறவற சபைகள் கடந்த மூன்று வருடங்களாகக் கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் இதர நிகழ்வுகள் வழியாக, தூய தெரேசாவின் ஆன்மிகத்தைச் சிறப்பான விதத்தில் பறைசாற்றக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

இந்தியக் கார்மேல் குடும்பமும் நம் இந்திய நாட்டில் பல இடங்களில் கொண்டாடி மகிழ்கின்றது. வடக்கு, தெற்கு என்று இந்தியாவின் இரு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதன் சிறப்பம்சம் கார்மேலின் துறவற சபைகள் ஒன்றாக இணைந்து ஒரே குடும்பமாகக் கொண்டாடிச் சான்றுபகர்தலாகும்.

தமிழ்நாட்டிலுள்ள கார்மேல் துறவற சபைகள்

Order of Discalced Carmelites (OCD)

Discalced Carmelites Nuns (OCD)

Congregation of Teresian Carmelites (CTC)

Congregation of the Mother of Carmel (CMC)

Carmelites of Mary Immaculate (CMI)

Carmelite Sisters of St. Teresa (CSST)

Apostolic Carmel (AC)

Institute of Our Lady of Carmel, Istituto di Nostra Signora del Carmelo (INSC)

Secular Order of Discalced Carmelites (OCDS)

தமிழ்நாட்டிலும் கார்மேலின் துறவற சபைகள் அனைத்தும் ஒன்றுகூடி, இணைந்து திட்டமிட்டு இந்த நூற்றாண்டு விழாவை, தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் கொண்டாடுகிறோம். புனிதம் அனைவருக்கும் சொந்தம். அன்பு ஒன்றே வாழ்வாக வேண்டும், பணியாக வேண்டும். தூயவராகிவிடலாம்; சிறிய செயல்கள் வழியாகப் பெரிய நிலையை அடைந்து விடலாம் என்பதே சிறுமலரின் சிறுவழியின் சிறப்புச் செய்தியாகும்.

குழந்தை இயேசுவின் தூய தெரேசாவைக் கொண்டாடுவோம்! புகழ்வோம்!!