“உதவி செய்தல், வரவேற்றல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய மூன்றும், மனிதகுலத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தள அம்சங்களாகும்.”
- செப் 1, ஏழைகளுக்கான புனித
பிரான்சிஸ்
பணிக்
குழுவினர்
சந்திப்பு
“உண்மை எளிமையானது போலத் தோன்றினாலும், அதை வாழ்வது எளிதல்ல. இந்த உலகம் வெற்றிக்கே மதிப்பளிக்கிறது; உண்மையுடன் வாழ்வது ஒரு சவாலாகிறது.”
- செப் 2, புனித அகுஸ்தினார்
சபையின்
பொதுப்பேரவை
திருப்பலி
“நியாயமும் மாண்பும் மறுக்கப்பட்டு வருகிறவர்களுக்கு நீங்கள் குரலாகுங்கள். நம்பிக்கையின் சுடர் மங்கியுள்ள இடங்களில், நீங்கள் ஒளியாகவும் உப்பாகவும் இருக்கவேண்டும்.”
- செப் 3, புதன் மறைக்கல்வி
உரை
“இயேசுவின் வாழ்க்கை என்பது நம்பிக்கையின் புதையல். அந்த வாழ்க்கையைத் தேடும் பயணத்தில், நாம் உன்னதமான படைப்பாக மாறவேண்டும்.”
- செப் 5, மத்திய தரைக்கடல்
இளைஞர்
மன்றத்தினருடன்
உரையாடல்
“தேடுதலின் மனிதர்களாக, இயேசுவின் வாழ்க்கை என்னும் நம்பிக்கை நிறைந்த புதையலைத் தோண்டும் ஓர் உன்னதப் படைப்பாக மாறுவோம்.”
- செப் 6, யூபிலி ஆண்டு
மறைக்கல்வி
உரை
“சூரியனுக்கு முன்னால் நின்று அதன் ஒளியைப் பெறும் நாம் நிறம் மாறுகின்றோம். அதுபோல, நற்கருணைக்கு முன்பாக நிற்கும் நாம் ஒரு புனிதராக மாறுகின்றோம்.”
- செப் 7, அருளாளர்களான
பியர்
ஜார்ஜியோ
பிரசாத்தி
மற்றும்
கார்லோ
அக்குதிஸ்
புனிதர்
நிலைக்கு
உயர்த்தும்
திருப்பலி