news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (07.09.2025)

நம் வாழ்வின் அனைத்துச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள, நம் அன்னை மரியாவை எடுத்துக்காட்டாக, அடையாளமாகக் கொண்டு வாழ்கிறோம்.”

- ஆகஸ்டு 18, பியாட்சா சன் பியெத்ரோ என்னும் பத்திரிகை

அன்பை விட்டுக்கொடுக்காமல் மன்னித்து மாண்புடன் முன்னேறிச் செல்வதே கிறித்தவ வாழ்க்கை

- ஆகஸ்டு 20, புதன் மறைக்கல்வி உரை

இறைச்சட்டத்தின் தேவைகள், மனிதனின் மனசாட்சி, சுதந்திர இயக்கவியல் ஆகியவற்றிற்கு இடையில் சமநிலையைப் பேணிய புனிதர்களின் ஞானமிக்க முன்மாதிரியைப் பின்பற்றுவதே உலகின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி.”

- ஆகஸ்டு 21, 17-வது பன்னாட்டு அறநெறி, இறையியல் மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி

இன்றைய உலகின் மோதல்கள், சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆன்மிக வெற்றிடம் ஆகிய சவால்களில் அமைதி என்பது மனித சாதனை அல்ல; கடவுள் நம்முடன் இருப்பதன் அடையாளம்.”

- ஆகஸ்டு 22 , கிறித்தவ ஒன்றிப்பு வாரத்தில் பங்கேற்பாளர்களுக்கான செய்தி

நாசரேத் ஊரின் திருகுடும்பத்தைப் பார்ப்பதன் வழியாக, நமது குடும்பத்தின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.”

- ஆகஸ்டு 23, பொதுப்பேரவையில் பங்கேற்கும் அருள்சகோதரிகள் சந்திப்பு

இயேசுவே நமது நம்பிக்கையின் அளவுகோல், நாம் மீட்கப்படுவதற்கான பாதையும் அவரே; அவருடைய அன்பு, நீதி, அமைதிக்காக உழைப்பவர்களாவோம்.      

- ஆகஸ்டு 24, மூவேளைச் செபவுரை