‘வேகம் நல்ல அடிமை;
ஆனால்,
மோசமான எஜமானன்.’
நம்
வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் இன்று ‘வேகம்’ என்ற சொல்லால் நிரம்பி வழிகிறது. மொபைலைத் திறந்தால் ‘10 நிமிடத்தில் டெலிவரி’,
பேருந்து ஏறினால் ‘கொஞ்சம் சீக்கிரமா போங்க டிரைவர்’,
அலுவலகத்தில் ‘இப்போதே முடிவு தெரிய வேண்டும்’
என்று மேலாளர் - இப்படி நாம் வாழ்வது அல்ல, ஓடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால், ஓர் உண்மை என்னவென்றால், மலர்
மலர வேகம் இல்லை; ஆனால், மலர்ந்ததும் மணம் என்றும் நிலைக்கும். விதை முளைக்கப் பொறுமை தேவை; ஆனால், அது முளைத்தால் வாழ்க்கையைத் தாங்கும். அதுபோல, நம் வாழ்க்கைக்கும் வேகத்திற்கும் பொறுமைக்கும் சமநிலை தேவை.
வேகக் கலாச்சாரத்தின்
முகங்கள்
1. சாலைகளில்:
சிக்னலை மதிக்காமல் பாயும் வாகனங்கள். ‘ஐந்து நிமிடம்தானே தாமதம்?’ என்று சிந்திக்காமல், பல உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கும்
ஓட்டங்கள்.
2. பணியிடங்களில்:
உடனடி இலாபம், உடனடி முடிவு - மனிதர்களின் உழைப்பை ‘வேக இயந்திரம்’
போலப் பயன்படுத்தும் அழுத்தம்.
3. கல்வியில்:
‘இன்னும் வேகமாப் படி, இன்னும் அதிகமா ரிசல்ட் எடு’ என்று குழந்தைகளின் சிறு வயதையே பறிக்கும் சூழல்.
4. சமூகத்தில்:
பொறுமையில்லாப் பேச்சு, அவசர முடிவுகள் - உறவுகளையே உடைக்கும் நிலை.
வேகம் - நன்மையும்
தீமையும்
•
வேகம் நம்மைக் கட்டுப்பாட்டுடன் முன்னேற்றும்போது அது வளர்ச்சி.
• வேகம் நம்மை அவசரத்தில் இழுக்கும்போது அது அழிவு.
“ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு” (சஉ 3:1).
வேகக் கலாச்சாரத்தின்
ஆபத்துகள்
1. விபத்துகள்
- தினமும் சாலையில் உயிர்கள் பறிபோகின்றன.
2. மன
அழுத்தம் - ‘வேகமா முடிக்கணும்’ என்ற
அழுத்தம் மனநோயை உண்டாக்குகிறது.
3. குடும்பத்
தகராறு - அவசரத்தில் பேசிய வார்த்தைகள் உறவுகளை உடைக்கிறது.
4. சுற்றுச்சூழல்
சீர்குலைவு - வேகத்தில் வளர்ச்சி தேடி இயற்கையை அழிக்கும் உலகம்.
வேகம்
ஒரு தீப்பொறி!
வாழ்க்கையை
ஒளிரச் செய்யும்!
ஆனால்,
அதையே தவறாகப் பயன்படுத்தினால்,
அது
வீட்டையே எரித்துவிடும்.
பொறுமை
ஒரு மழை!
மெல்ல
மெல்ல விழுந்தாலும்,
வேர்களை
ஆழமாக வலுப்படுத்தும்.
அதனால்,
வேகத்திலும் பொறுமையிலும்
இணக்கத்தைக்
கற்றுக்கொள்வோம்.
நாம்
என்ன செய்ய வேண்டும்?
• சாலைகளில்: விதிகளை மதித்து, மற்றவர்களின் உயிரை மதிப்பது.
•
வாழ்க்கையில்:
சிறிது தாமதம் பரவாயில்லை என்று மனத்தை வளர்த்துக்கொள்வது.
•
குடும்பத்தில்:
குழந்தைகளுக்கு ஓடாமல், வளரும் இடத்தை வழங்குவது.
•
சமூகத்தில்: வேகத்துக்குப் பதிலாகத் தரமும் அமைதியும் முன்னிலைப்படுத்துவது.
இன்றைய
மனிதன் ‘சில நிமிடம் கூட காத்திருக்க முடியாது’
என்ற நிலைக்கு வந்துவிட்டான். ஆனால், உண்மையில் நேரம் குறைவதில்லை; பொறுமை குறைகிறது. வேகக் கலாச்சாரம் வாழ்வை வசதியாக்கலாம்;
ஆனால், நம் மனத்தையும், நம் உறவுகளையும், நம் உயிரையும் சிதைக்கக்கூடியது.
அன்புள்ளோர்களே....
வேகமும் பொறுமையும் இணைந்தால்தான் வாழ்க்கை அழகாக மலரும். பொறுமையைக் கற்றுக்கொண்டால்தான் வாழ்வு நிலைத்திருக்கும். “அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்” (பிலி
4:7).