இந்தியாவில் ‘ஆசிரியர் தினம்’ செப்டம்பர் 5-ஆம் நாள் டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் குறிக்கிறது. அவர் புகழ்மிகு அறிஞர். பாரத இரத்னா விருதாளர். முனைவர், பேராசிரியர். சுதந்திரத் திருநாட்டில் முதல் துணைக் குடியரசுத் தலைவர். தமிழ்நாட்டின் இரண்டாம் குடியரசுத் தலைவர். தத்துவமேதை, சிறந்த கல்வியாளர்.
1888-ஆம் ஆண்டு
செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள்
பிறந்தார். இராதாகிருஷ்ணனின் நண்பர்களும், பல மாணவர்களும் அவரது
பிறந்த நாளைக் கொண்டாட விரும்புவதாக அவரை அணுகியபோது, “எனது பிறந்த நாளைத் தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக செப்டம்பர் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனக்குப் பெருமையாக இருக்கும்”
என்றார்.
1967-ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவையும் ஞானத்தையும் பரப்புவதற்காக ஆசிரியர் தொழிலைத் தேர்வு செய்கின்றனர். படித்த மக்கள் தொகை உள்ள நாடுதான் பெரும் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது. ஒரு நாடு பொருளாதார ரீதியாக வெற்றிபெற சரியான வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையும் வேண்டும். பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது மட்டுமல்லாமல், பொறுப்புள்ள குடும்ப மக்களாக, குடும்பங்களாக அவர்களை வடிவமைக்கிறார் ஆசிரியர்.
இந்த
நாள் தரமான கல்வியைப் பெறுவதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளைப் புரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இந்நாள் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமானது. ஏனெனில், இந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் மாணவர்கள் மற்றும் புகழ்மிக்க அமைப்புகளால் கௌரவிக்கப்படுகின்றார்கள். ஆசிரியச் சான்றோரைப் பெருமைப்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்
தினம் ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இடையிலான தூய்மையான பிணைப்பைக் கொண்டாடும் அற்புதமான நாள். ஆசிரியர்களுக்கான கூட்டங்கள் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளை ஏற்பாடு செய்து, இந்தச் சிறப்பு நாளை மறக்க முடியாததாக மாற்றுகின்றார்கள். எவ்வளவு பாராட்ட, வாழ்த்த, போற்ற முடியுமோ அத்தனையும் செய்து பெருமைப்படுத்துகின்றார்கள்.
ஒன்றிய
அளவில் உள்ள கல்விப் பட்டியலை மாநில அரசுக்கு மாற்றி, அந்தந்த மாநில அரசுகளே செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும். தமிழ்நாடு, கேரளம் போன்ற தென் மாநிலங்கள் கல்வியில் நாட்டில் பெரும்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்வியில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகப் பணி வாய்ப்பிலும் சரி, எல்லாத் துறைகளிலும் உள்ளது. இதற்கு மூலகாரணம் ஆசிரியர்களே. மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல்
கலாம் தன்னை எவ்வாறு ஆசிரியச் சான்றோர் உருவாக்கினார்கள் என்பதைப் புத்தக வடிவில் வெளியிட்டு ஆசிரியச் சான்றோர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
நமது
நாட்டில் உயர் பதவிகளில் இருந்த பலரும் ஆசிரியர்களே! பல்துறை சேர்ந்த பரந்த அறிவையும் மாணவர்களுக்கு வழங்குபவர்களும் ஆசிரியர்களே!
இந்நாளை
நாம் கொண்டாடும்போது ஆசிரியர்கள் தன்னலமற்ற சேவையை நினைத்து அவர்களைப் பெருமைப்படுத்தத் தவறக்கூடாது. ஆசிரியர்கள் தாங்கள் செய்யும் பணியைப் போற்றி அவர்கள் தங்கள் பணியை மேலும் சிறப்பாக ஆற்றிட அவர்களை வாழ்த்துவோம்.