‘நம் வாழ்வின்’ பொன்விழா ஆண்டில் ‘நம் வாழ்வு’ இதழின் தனித்துவம், முக்கியத்துவம், இதழின் சிரமங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்கூறி, பல மக்களை ‘நம் வாழ்வு’ சந்தாதாரராக மாற்றியுள்ளார் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் வண்ணாரப்பேட்டை பங்கின் பங்குத்தந்தை அருள்பணி. அருள் ஜேசுதாஸ் அவர்கள். குறிப்பாக, குழந்தைகளை வாசிக்க ஊக்குவிக்கும் பொருட்டு, 65 மாணவர்களுக்கு, ‘கல்விச் சுரங்கம்’ எனும் மாணவர் மாத இதழை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அண்மையில் வெளியிட்ட ‘வானவில் வரிசை நூல்கள்’ (மாணவர்களின் பன்முக ஆளுமை வளர்ச்சிக்கான 7 நூல்கள்) 65 மாணவர்கள் வாங்கிப் பயன்பெற ஊக்கப்படுத்தியுள்ளார்.
இந்த
அரிய முயற்சியை மேற்கொண்ட அருள்தந்தை அருள் ஜேசுதாஸ் அவர்களுக்கும், அனைத்து மறைக்கல்வி மாணவர்கள்-ஆசிரியர்களுக்கும் சிறப்பான நன்றி!
- முதன்மை ஆசிரியர்