news-details
இந்திய செய்திகள்
இந்திய இறையியலாளர்கள் அமைப்பில் முதல் பெண் தலைவர்! - பாலினச் சமத்துவத்திற்கான ஓர் அழைப்பு!

புனேயில் நடைபெற்ற இந்திய இறையியலாளர்கள் அமைப்பின் (ITA) ஆண்டிறுதிக் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக, சவனோட் சிலுவை சகோதரிகளின் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி ஈவ்லின் மொன்டேய்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய இறையியலாளர்கள் அமைப்பின் வரலாற்றில் ஒரு பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. தொலைநோக்குப் பயிற்சி அனுபவம் கொண்ட இறையியல் பேராசிரியரான அருள்சகோதரி ஈவ்லின்,  ITA-வின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இறையியலாளர் மற்றும் சமூகத் தொடர்பாளர் ஆஸ்ட்ரிட் லொபோ இந்தத் தேர்வு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இதுவரை ஆண்கள் மட்டுமே இருந்த ஒரு துறையில், ஒரு பெண்ணின் குரல் கேட்கப்பட தேவையான மதிப்பும் பார்வையும் நம்பிக்கையும் ஈவ்லினிடம் உள்ளதுஎன்று குறிப்பிட்டார்.