வத்திக்கானில் மரியன்னை ஆன்மிக விழா சிறப்புத் திருப்பலி அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது மறையுரையில் திருத்தந்தை லியோ, தன் மகன் இயேசு கிறிஸ்துவை நோக்கி, எவ்வாறு நாம் பின்தொடர்வது என்பதற்கான ஓர் அழகான எடுத்துக்காட்டு அன்னை மரியா என்று குறிப்பிட்டதுடன், “நமது நம்பிக்கையை வளர்க்கும் மரியன்னை ஆன்மிகம் இயேசுவை மையமாகக் கொண்டுள்ளது” என்று நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டினார். மரியன்னை ஆன்மிகம் நற்செயல் புரிவதற்கும், அதை முழுமையாக வாழ்வதற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்ட அவர், “நாசரேத்து மரியாவிடம் நாம் கொண்டுள்ள பாசம் இயேசுவின் சீடர்களாக, அவருடன் சேர நம்மை வழிநடத்துகிறது” என்றும் தெரிவித்தார். மேலும், “கடவுளின் திட்டத்தை மரியா ‘ஆம்’ என்று ஏற்றுக்கொண்டது ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்படும் செயல் அல்ல; மாறாக, ஓர் அன்றாட உறுதிமொழி” என்றும், “அது ஒருமுறை கொடுக்கப்பட்டது அல்ல; மாறாக, அது ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டது” என்றும் கூறினார்.