news-details
இந்திய செய்திகள்
முழு திருவிவிலியத்தையும் கைகளால் எழுதிய கல்லூரி மாணவி!

இன்றைய இளைஞர்கள் இறைப்பக்தியில் பின்தங்கியவர்கள் அவர்கள் திருவிவிலியத்தை வாசிப்பதில்லை என்று குறை கூறுவதற்குப் பதிலாக, அவர்களிடம் அவர்களுக்குப் புரியும் விதத்தில் இறைச்செய்தியை எடுத்துச் சென்றால், அவர்கள்கூட சாட்சிய வாழ்வு வாழமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக நிற்கிறார் சிவகங்கை மறைமாவட்டம், வேம்பத்தூர் மிக்கேல்பட்டினம் பங்கைச் சேர்ந்த செல்வி ஜோவிட்டா. 2024 டிசம்பரில் பங்குத்தந்தை அருள்பணி. C.A. ஜேம்ஸ் அவர்களின் ஊக்கத்தின்படி திருவிவிலியத்தைத் தனது கையால் எழுதத் தொடங்கி, 2025 செப்டம்பரில் முழுமையாக எழுதி முடித்துள்ளார். மொத்தம் 2400 பக்கங்கள் எழுதியுள்ளார். ஜோவிட்டாவின் இந்த ஆன்மிக முயற்சியைப் பாராட்டும் வகையில், பங்கின் திருவிழா நாளில் ஊர் மக்கள் சார்பாக ரூ.10,000/- வழங்கப்பட்டது. மேலும், அண்மையில் ஓரியூரில் நடைபெற்ற சிவகங்கை மறைமாவட்டத்தின் திருப்பயணத்தின்போது, மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் ஜோவிட்டாவைப் பாராட்டி ஊக்குவித்தார்.