news-details
சிறப்புக்கட்டுரை
தேர்தல் 2026: தயாராகும் தமிழ்நாடு தேர்தல் களம்

தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தல் அனல் பறக்கிறது. 2026-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு மேடை தயாராகி விட்டது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில்  6.36 கோடி வாக்காளர்களை வசியம் செய்யும் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் வியப்பூட்டுகின்றன. மாநாடுகள், யாத்திரைகள் என வாணவேடிக்கைகள் தினமும் நடக்கின்றன.

தி.மு.. மற்றும் .தி.மு..-வின் இரு துருவ அரசியல், மாற்று அரசியல் எனப்  பரபரப்பு  கூடுகிறது. மூன்றாவது அணியானநாம் தமிழர் கட்சியும், நான்காவது அணியாகத் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்களம் காண்கிறார்கள். தமிழ்நாடு வாக்காளப் பெருங்குடிகளை வகை தொகை பிரித்து ஆய்வோம்.

தமிழ்நாடு வாக்காளர்களில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 பேர் மூன்றாம் பாலினத்தவர், 3,740 வாக்காளர்கள் வெளிநாட்டு வாக்காளர்கள், 4.78 இலட்சம் வாக்காளர்கள் மாற்றுத்திறன் படைத்தோர், 85 இலட்சம் வாக்காளர்கள் இளையோராக அடையாளம் காணப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர்களையும் வேறு வகையாகப் பிரிக்கலாம். 40 இலட்சம் வாக்காளர்கள் மொழிவாரி சிறுபான்மை மக்கள். 80 இலட்சம் வாக்காளர்கள் மதவாரி சிறுபான்மை மக்கள். இவர்கள்தாம் தமிழ்நாடு தேர்தல்  களத்தில் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பவர்கள். இவர்கள் வாக்குகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், .தி.மு.எனும் அரசியல் கட்சி, பா...வோடு கூட்டணி அமைத்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரு துருவ அரசியலில் ஏற்படப் போகும் பெரிய சம்மட்டி அடி அது.

2031-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம் நிறைவேறிவிட்டது. ‘திராவிடக் கட்சிகள் இல்லா தமிழ்நாடுஎன்ற அடிப்படையில் .தி.மு..வைச் சிதைக்கப் போட்ட திட்டம் கண்கூடானது.

2024-மக்களவைத் தேர்தலில்இந்தியாகூட்டணி 221 சட்டமன்றத் தொகுதிகளில் முதலிடம் பெற்றது. .தி.மு.. 8,  தே.தி.மு.. 2, பா... 3 சட்டமன்றத் தொகுதிகளில் முதலிட வாக்கை அள்ளின. விழுக்காட்டில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘இந்தியாகூட்டணி 48% வாக்கையும், .தி.மு.. கூட்டணி 21% வாக்கையும், பா... கூட்டணி 18% வாக்கையும், நாம் தமிழர் கட்சி 8%  வாக்குகளையும் பெற்றன. கூட்டணிகளைப் பொறுத்தவரைஇந்தியாகூட்டணியினர் 2017 முதல் ஒருங்கிணைந்து வலுவாக உள்ளனர். கூடவே  தே.மு.தி.. மற்றும் பா... இராமதாஸ் அணிக்கு தி.மு.. வலைவீசுகிறது. தமிழ்நாடு முதல்வரின் 50-வது திருமண நாள் விருந்து என்று அழைத்து, இவ்விவரங்களைத் தோழமையோடு பேசி முடித்தார்கள்.

மக்களவைத் தேர்தலில் .தி.மு..-வுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.. மற்றும் எஸ்.டி.பி.. போன்ற இயக்கங்கள்நன்றி, ‘வணக்கம்எனக் கூறி வெளியேறிவிட்டன. ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குஎன்ற நடிகர் விஜய் அவர்களுக்கும், கூட்டணிக்கு ஆளில்லாத நிலையாக 2026 - தேர்தல் களம் உள்ளது.

அண்மைக் காலங்களில் சாதி வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட மண்டலவாரி மக்களின் மனநிலை பேசப்படுகிறது. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், டெல்டா பகுதி, சென்னை, திருவள்ளூர் எனப் பகுதிப் பிரிப்பு உள்ளன. சாதிக்கட்சிகள், தலித் வாக்கு வங்கி எனக் குறிவைத்த வாக்குகள் தனி இரகம். அங்கும் எல்லாக் கூட்டணிகளும் முட்டி மோத வேண்டும். மக்கள் மனநிலை தேர்தலுக்கு முன், தேர்தல் காலத்தில், தேர்தலுக்குக் கடைசி வாரத்தில்... என மாறி மாறிப் பிரதிபலிப்பதாகும்.

இந்தியாகூட்டணி வலுவாக இருந்தாலும், தினமலரின் திண்ணைப் பிரச்சாரம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  பொய்ப்பிரச்சாரம் பெரிய அளவில் வெற்றி கொண்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சட்டம்-ஒழுங்கை உள்ளடக்கிய, பெண்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருள் கலாச்சாரம் என்பதில் உருப்பெற்றுள்ளது. அது அடையாளங் காண முடியாத மாநிலங்களைத் தாண்டிய ஒரு வேளை குறி வைத்த அரசியல் சதியாகவும் இருக்கலாம். அதற்கும் வாய்ப்புகள் அதிகம். காவல்துறைப் பணிகள் சிறப்பாக இல்லை; அது வேகாத பருப்பாக உள்ளது. தமிழ்நாடு காவல்துறை, தேர்தல் காலத்தில் கவனமாக இல்லாவிடில், பழி முழுவதும் ஆளும் அரசின் தலையில் விழும். தற்போதும் இதே நிலைதான்.

தமிழ்நாடு தேர்தல் களம் இரண்டு முக்கிய முழக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளன. ஒன்று, ஆளும் தி.மு..வை வீட்டிற்கு அனுப்புவது; இரண் டாவது, யார் அடுத்த தமிழ்நாடு முதல்வர்? அந்தோ பரிதாபம்! எதிர்க்கட்சிகள் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்துப் பேசவில்லை. விலைவாசி உயர்வு, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின், நெசவாளர்களின், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து வலுத்தக் குரல் தரவில்லை. சிறு குறு தொழில்கள் இல்லாத தமிழ்நாடு எனக் கவலைப்படவில்லை.

ஆரியத்திற்கு எதிரான திராவிடம் என்ற அடிப்படை அறமின்றி, .தி.மு.. கூட்டணி உருப்பெற்றது தமிழ்நாட்டின் சாபக்கேடு. திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆரிய அரசியல் என்ற கோட்பாட்டு விதிகளுக்கு உட்பட்ட ஆட்டமாக, தமிழ்நாடு தேர்தல் களம் இருந்தால் அது நல்லது; நலம் தரக்கூடியது. அது மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை அணுகும் புதிய  பாதையாகவும் அமையும் .

தேர்தல் களத்தில் கருத்துக் கணிப்புகள் என்ற மந்திரம், வாக்காளர்களின் வெற்றி பெறும் கட்சியைத் தேடும் ஓட்டத்தில் முதன்மைப் பெறுவது. அது வானவில்லாகத் தோன்றி மறைந்தாலும், அரசியல் கட்சித் தொண்டர்களை ஓடவும் சோம்பிக் கிடக்கவும் வழிவகை செய்யும். தமிழ்நாடு அளவிலான முடிவுகள், ஆளும்இந்தியாகூட்டணிக்குப் பலம் சேர்ப்பதாக வெளியாகிறது,

2026 - தேர்தல் முடிவுகளில் கருத்துக் கணிப்புகளின் உண்மைத் தன்மை தெரியும். இதைவிடக் கொடுமை ஒன்று உண்டு. அது சமூக ஊடகங்கள்! ஒரு நடிகரின் வீடியோ, ஒரு நாளில் 10 கோடி பார்வைகளும், ஒரு கோடி விருப்பங்களும் பெற்றதாக அறிகிறோம். எண்ணியல், கணினித் தொழில் நுட்பங்கள்... தெரியாதோர் வேண்டுமெனில் இதை ஏற்றுக்கொள்ளலாம். விவரம் தெரிந்தோர் வாய்விட்டுச் சிரிப்பார்கள். ஓர் ஆண்ட்ராய்டு செல்லிடைப்பேசி இருந்தால், எதையும் செய்யலாம். அதில் பொய்யை வலியக் கூறலாம் என்பதே எதார்த்தம். தமிழ்நாடு தேர்தல் களத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தன் பணியை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம்  தேசிய, மாநிலக் கட்சிகளில் 11 கட்சிகளுக்கு தமிழ் நாட்டில் பொதுச்சின்னம் ஒதுக்குகிறது. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சியாகச் செயல்பட்டு, பொதுச்சின்னம் இல்லாத கட்சிகளின் எண்ணிக்கை 15. தமிழ்நாட்டில் பதிவு செய்து தேர்தலில் நிற்காத 22 கட்சிகளை 2025, ஆகஸ்டில் தேர்தல் ஆணையம்  அடையாளம் கண்டு, அக்கட்சிகளின் பதிவை இரத்து செய்தது.

தனிக்கட்சிகளைவிட கூட்டணிகளே வெற்றிக்கு அடிப்படைக் காரணி. 2026, சனவரி முதல் மார்ச் வரை உருவாகிற புதுப்புதுக் கூட்டணிகளால் தமிழ்நாடு  தேர்தலில் சடுகுடு  ஆட்டம் புதிய மாற்றம் பெறலாம். 15 முதல் 20 விழுக்காடு உள்ள சிறுபான்மையின மக்களின் முடிவே, தமிழ்நாடு தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்; கள எதார்த்தமும் இதுவே.