news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (26.10.2025)

நமது ஏமாற்றத்திலும் இருளிலும் கூட, உயிர்த்தெழுந்த இயேசு நம்முடன் நடந்துகொண்டிருக்கிறார்.”

- அக். 8, புதன் மறைக்கல்வி உரை

திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திரு அவையின் ஒருமைப்பாட்டில் கேட்டுப் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.” 

- அக். 9, அருள்தந்தை தோம் மேத்தியோ ஃபெராரி (GSO) அவர்களுக்கு வாழ்த்துச்செய்தி

மக்களுடன் இணைந்து பயணிக்கும் கேட்கும் பகிரும் பரிசோதிக்கும் திரு அவையை உருவாக்குவோம்.”

- அக். 11, திருப்பயணிகளுக்கான செய்தி

இறைவனுடனான உள்ளார்ந்த உறவு மனிதகுல ஒற்றுமைக்கும் திரு அவையின் புனிதத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.”

- அக். 11, துறவறத்தாருக்கான யூபிலிச் சந்திப்பு

மரியன்னையின் மீதான ஆன்மிகம் இயேசுவை மையமாகக் கொண்டு, நம்மை உயிர்த்தெழுதலின் வழியில் புதுப்பிக்கிறது.”

- அக் 12, மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலி சிறப்புத் திருப்பலி

துன்புறுவோருடன் கடவுள் என்றும் இருக்கிறார்; மன்னிப்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மனிதகுலத்தின் தற்போதைய தேவை.”

- அக் 12, மூவேளைச் செப உரை