news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (05.10.2025)

உள்ளார்ந்த ஆன்மிகம், அழைத்தல் மற்றும் அன்பின் வழியாய் மறைப்பணி, சமூகத்துடனான வாழ்வை ஆழப்படுத்துகிறது.”

- செப். 15, புனித அகுஸ்தினார் சபையின் புதிய சபைத் தலைவருக்கு வாழ்த்து

துன்பத்திலும் இருளிலும் கூட கடவுளின் ஆறுதல் நம்மை வழிநடத்தும் நம்பிக்கையின் பாலமாகிறது.”

- செப். 16, ஆறுதல் அளிப்பவர்களுக்கான யூபிலி சிறப்பு உரை

அன்பில் நிறைந்த காத்திருப்பின் மௌனத்தில், நம்பிக்கை வழியாகக் கடவுள் புதிய எதார்த்தத்தை உருவாக்குகிறார்

- செப். 17, புதன் மறைக்கல்வி உரை

துறவற வாழ்வு, காலத்தின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் தூய ஆவியாரின் சான்றாகச் சமூகத்திற்கு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.”

- செப். 18, துறவற சபையினர் சந்திப்பு

எதிர்நோக்கின் யூபிலி, குடும்பங்களை நம்பிக்கையின் வேர்களுக்குத் திருப்பி, இயேசுவில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை நோக்கி அழைக்கிறது.”

- செப். 19,  குடும்பத்தின் எதிர்காலம் குறித்து CELAM குழுவினர் சந்திப்பு

உண்மையான நீதி இல்லாமல் அரசு சாத்தியமில்லை; நீதியே மனித உரிமை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளம்.”

- செப். 20,  நீதித்துறை ஊழியர்களுக்கான யூபிலி உரை 

உண்மையான செல்வம் என்பது பொருள்களில் இல்லை; உறவுகள் மற்றும் பொறுப்புடன் வாழும் வாழ்க்கையில் அர்த்தம் பெறுகிறது.”

- செப். 21, மூவேளைச் செப உரை