news-details
வத்திக்கான் செய்திகள்
‘நான் உன்னை அன்பு செய்தேன்’ (Dilexi te) - திருத்தந்தை லியோவின் முதல் திருத்தூது ஊக்கவுரை

புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாளன்று திருத்தந்தை லியோ, அதாவது, ‘நான் உன்னை அன்பு செய்தேன் (Dilexi te) எனப் பொருள்படும் தனது முதல் திருத்தூது ஊக்கவுரையில் கையெழுத்திட்டுள்ளார். அக்டோபர் 4-ஆம் தேதி உரோமை நேரப்படி காலை 8.30 மணிக்குத் திருத்தந்தை மாளிகையின்  தனி நூலகத்தில், திருப்பீடச் செயலகத்தின் பொது அலுவல் துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் எட்ஜர் பெணாபாரா முன்னிலையில், இத்திருத்தூது ஊக்கவுரையில் திருத்தந்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆவணம்  அக்டோபர் 9-ஆம் தேதி, திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.