news-details
உலக செய்திகள்
260 பேரைப் பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதல்! - சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கக் கோரியது இலங்கைத் திரு அவை!

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கடந்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும், இதனை விசாரிக்க, சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கக் கோரியும் அந்நாட்டுத் திரு அவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் ஆலயம் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் மீதும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நீதியை எதிர்பார்த்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், கத்தோலிக்கத் திரு அவையும், இந்த நாடும் காத்திருக்கிறது. ஏனெனில், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இந்த வழக்கின் விசாரணைக்குச் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவேண்டும் எனவும், உயிரிழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க கத்தோலிக்கத் திரு அவை தொடர்ந்து போராடும் எனவும் ரோஹன் சில்வா தெரிவித்துள்ளார்.