news-details
வத்திக்கான் செய்திகள்
“படைப்புத் திறன்களைப் பலவீனப்படுத்துகிறது AI”- வத்திக்கான் ஊடக ஆணையம் கவலை!

செயற்கை நுண்ணறிவுடன் (AI) தொடர்புடைய அபாயங்கள் குறித்து வத்திக்கான் ஊடக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “AI மீதான அதிகப்படியான நம்பிக்கை, மனிதர்களின் விமர்சனச் சிந்தனை மற்றும் படைப்புத்திறன்களைப் பலவீனப்படுத்துகிறது எனவும், இத்தகைய அமைப்புகளின் ஒருமித்தக் கட்டுப்பாடு, அதிகாரத்தை மையப்படுத்துதல் மற்றும் சமத்துவமின்மை போன்ற அதீத விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், AI-யினால் பெரிதும் ஈர்க்கக்கூடிய, தவறாக வழிநடத்தித் தீங்கு விளைவிக்கும் தகவல்களை உருவாக்க முடியும் என்பதால், மனிதர்களுடைய குரல்கள் மற்றும் முகங்களை உருவாக்கி, தவறான தகவல்களைப் பரவச்செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.