news-details
சிறப்புக்கட்டுரை
வெப்பமயமாதலின் விளைவுகள் (உலகம் உன் கையில் – 13)

பூமியின் வெப்ப அதிகரிப்பினால் வெப்ப அனல் காற்று (heatwaves), அடிக்கடி வறட்சி (Drought), அதிகளவு மழை  (rainfall) மற்றும் சூறாவளிகள், சில உயிரினங்களின் உயிரிழப்பு என்பவை சில நேரடியான விளைவுகள். காற்றின் வேகம் அதிகரிப்பு, பூமியின் நிலப்பரப்பு அதிக வெப்பமடைவதால் தானாகவே காட்டுத்தீ (wildfires) உருவாவது, சில பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வறட்சி (drought) தொடர்ந்து நீடிப்பது மற்றும் உலகளவில் உணவு உற்பத்தி குறைதல், ஏழ்மை அதிகரிப்பு, இடம்பெயர்வு, உடல்நலம் பாதிப்பு என்பவைகளுக்கும் வெப்பமயமாதல் காரணமாயிருப்பதாக அறியப்படுகிறது.

நாம் வாழும் பூமி இயல்பாக காற்று, நிலம், நீர் என்று ஒன்றையொன்று சார்ந்துள்ளதுஇப்போது ஏற்பட்டுள்ள வெப்பமயமாதலால் வடதுருவப் பனிக்கட்டிகள், சில மலைகளின்மேல் படர்ந்துள்ள பனிக்கட்டிகள் அசாதாரணமான வெப்பத்தினால் உருக ஆரம்பத்திருப்பதும், காலந்தவறிப் பனிப் பொழிவு, கடல்மட்டம் உயர்வு என்பவை இயற்கைச் சூழலை (Ecological balance)அசைப்பதாகவும் அறியப்படுகிறது.

மற்றொரு செய்தி, தென்துருவத்தில் பனி அகன்ற இடங்களில் புல் காணப்படுவதாகவும், இது புதிராக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  1940-லிருந்து காலநிலை தரவுப் பதிவுகளின்படி (record of climate and weather data -ERA5) 2024-ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்று அறியப்படுகிறது. இது வெப்ப அதிகரிப்பின் தொடர்ச்சியைக் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கூறுகிறார். காலநிலை விஞ்ஞானிகள் இவை, மனிதனால் உண்டான கழிவு வாயுக்கள் (anthropogenic green house gases) என்றும், இதன் விளைவுகளை அண்டார்டிகா போன்ற இடங்களிலும் காணமுடிகிறது என்றும் கூறுகின்றனர்.

..-யின் வளர்ச்சியும் வெப்பமயமாதலும்

ஜூன் 2024 மத்தியில் உலக .. நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட்டின் நிறுவுநர் பில்கேட்ஸ் பேசுகையில், “வெப்பமயமாதலைச் சமாளிக்க மாசில்லா மின்சாரத்தைப் பயன்படுத்தவும், அதிக விலையிலும் வாங்க எங்களைப் போன்ற .. பெரும் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனஎன்று கூறினார். உலகப் பெரிய நிறுவனங்கள், மாசில்லா மின்சக்தியைப் பெரியளவில் வாங்குவதில் முன்னிலையில் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால், இத்தகைய நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு ஏறுமுகத்திலிருக்கிறது என்பதை அந்நிறுவனங்களின் கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கூகுள் நிறுவன கார்பன் வெளியேற்றம் 48% அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிரசித்திப்பெற்ற .. மாடல்களான ஓபன் AI-யின் Chat -GPT மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி தங்கள் chatbot கருவிகளுக்கு இன்னும் இவற்றைப் போன்ற பல நிறுவனங்கள் பயிற்சி அளிக்க தரவு மையங்களை நம்பியிருக்கின்றன. இத்தரவு மையங்கள் திறம்படச் செயலாற்ற மின்சாரம் மிக முக்கியமானதாக இருக்கிறது.

தரவு மையங்கள் மற்றும் அதனைச் சார்ந்த செர்வர்ஸ் (servers) தொடர்நிலையங்களின் மின் உபயோகம், சிப்ஸ் (chips) உற்பத்தியின் மின்சாரத் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக மின்சக்தி கழகம் தங்களுடைய ஆய்வில் உலகளவில் 2022- வைத்துப் பார்க்கும்போது தரவு மையங்களின் மின்தேவை 2026-இல் இரண்டு மடங்காகும் என்கிறது. அதாவது, ஜப்பானின் மின் தேவைக்குச் சமமாக (1000 TWHrs) இருக்குமென்றும், 2030-இல் தரவு மையங்களுக்கு மட்டும் உலகளவில் 4.5% மின்சாரம் தேவைப்படுமென்றும் கணிக்கப்படுகிறது

.. புரட்சியில், நீரின் தேவையும் சேர்ந்து கொள்கிறது. 2027-ஆம் ஆண்டில் நீரின் தேவை 6.6 பில்லியன் cubic metres இருக்குமென்றும், இது இங்கிலாந்து நாட்டின் வருடாந்திரத் தேவையில் மூன்றில் இரண்டு (2/3) பங்கு என்றும் கணிக்கப்படுகிறது.

.., பொழுதுபோக்குத் துறையில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. கற்கும் இயந்திரம் (மெஷின் லர்னிங்-ஆடு) உதவியுடன் நடைமுறையிலிருக்கும் ஸ்மார்ட்போன், ஆட்டோ வாகனங்கள், பாதுகாப்புச் சாதனங்கள், ஓட்டுநரில்லா வண்டிகள் ஜி.பி.எஸ். (GPS) தொழில்நுட்பத்தைக் கொண்டே செயல்படுகின்றன. அல்கோரிதம் அடிப்படையில் செயல்படும் சமூக ஊடகங்களிலும் நாளுக்கு நாள் ..-யின் ஊடுருவல் உலகளவில் அதிகரித்து வருகிறது.

..-யின் பயன்பாடு முற்றிலும் மின்சாரத்தையே நம்பியிருக்கும் நிலையில், இத்தொழில்நுட்பத்தின் விளைவுகளையும் சமீபத்திய ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

கணினி செயலாக்கம் மற்றும் நவீன .. மாடல்களை இயக்க, பயிற்சி அளிக்கத் தேவைப்படும் மின்சாரம், அதனால் வெளியாகும் கார்பன் வெளியேற்றம் என்பவை சுற்றுச்சூழலைப் பாதிப்படையச் செய்கிறதென்று அறியப்படுகிறது. இதன் பாதிப்பு கார்பன் கட்டுப்பாட்டின் வரையறையைவிட அதிகமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

புவி வெப்பமாவதைத் தடுக்க .. உதவுகிறதா?

இன்று .. புதுமைப் படைப்பிற்கும், தொழில்துறைக்கும் உந்துசக்தியாக விளங்குகிறது. இத்தொழில்நுட்பம் நம் வாழ்வின் வழிமுறைகளில் ஒன்றிவிட்டதென்பதை நம் கடந்தகால அனுபவங்கள் கூறுகின்றன. இதன் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது மின்சாரம். ..-யின் வளர்ச்சியும் மின்சாரத்தின் தேவையும் ஒரே திசையில் இருப்பது, ‘இவை இரண்டும் புதிய நண்பர்களா?’ என்று தோன்றுகிறது. இன்றுள்ள மின்சார உற்பத்தி ஆதாரங்கள் பெரும்பாலும் உலக வெப்பமயமாதலுக்குக் காரணிகளாக உள்ளன என்ற அச்சம் உலகளவில் நிலவுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் மின்உற்பத்தி உருவெடுத்ததன் வரலாறு மூன்று கட்டங்களாகப் பார்க்கப்படுகிறது.

1970-2000 - பாரம்பரிய முறைகளுடன் மாசு இல்லாத மின் உற்பத்தி (Renewable Energy) இணைந்த காலம்.

2000-2020 - மின் உற்பத்திப் பிரிவில் தரவுத் தொழில்நுட்பம் மூலம் திறனை மேம்படுத்தி, மாசு இல்லாத மின்சக்தியை ஒன்றிணைத்துச் செயல்பட்ட இடைக்காலம்.

2020 - தானியங்கி (automation) தொழில்நுட்ப சகாப்தத்தின் ஆரம்பம்.

எரிசக்தி பயன்பாட்டின் இப்போதைய நிலை

ஓர் ஆய்வின்படி உலகளவில் எரிசக்தியின் பயன்பாட்டின் விகிதம் இவ்வாறு உள்ளது:

1. நிலத்தடி எரிபொருள்கள் - 81%

   (எரி எண்ணெய்+ நிலக்கரி+ எரிவாயு)

2. அணுசக்தி - 6%

3. நீர் மின்சாரம் - 2%

4. சூரிய ஒளி + காற்றாலை + பிற - 11%

இவ்வாய்வின்படி, எரிசக்தியின் பயன்பாட்டின் ஏற்றம் தொழில்புரட்சி மற்றும் மக்கள்பெருக்கம் போன்ற காரணங்களால் என்றும் எரி எண்ணெய் 1860-ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டாலும், 1940-ஆம் ஆண்டிலிருந்து அதிகளவில் உபயோகத்திலிருப்பது கார்பன் அதிகரிப்பிற்கு இது காரணமாக இருப்பதாகக் கூறுகிறது.

.. வெப்பமயமாதலைக் குறைக்கத் துணை நிற்குமா?

இந்நிலையில், உலகை எதிர்நோக்கியுள்ள வெப்பமயமாதல் என்ற பெரும் சவாலைச் சந்திக்க .. உதவிடும் என்றும் நம்பப்படுகிறது.

வெப்பமயமாதலால் என்றும் கண்டிராத இறப்பு, நோய், உணவுப் பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம் என்பவைகளை உலகம் இன்று எதிர்கொள்கிறது.

இயற்கையின் மாற்றம் பனிகட்டி உருகுதல், வெப்பமயமாதலின் வேகத்தையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் வெளிப்படுத்துகிறது. பனிக்கட்டி உருகும் இடங்களில் மனிதர் எளிதில் செல்ல முடியாமை ஒருபுறம்; அப்படியே செல்வதற்கும் காலநிலை ஒத்துழைக்க வேண்டியுள்ளது. இத்தகைய இடர்ப்பாடுகளினால், மனிதர் செல்ல முடியாத இடங்களைப் பற்றிய தகவல்கள், உண்மை நிலையை ..-யின் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் உதவியுடன் சில நிமிடங்களில் கண்டறியலாம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறுகிறது.

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலகளவில் காடுகளின் அழிவு மற்றும் கார்பன் சேமிப்பு போன்றவற்றைக் கண்காணிக்க செயற்கைக்கோள் தரும் தரவுகளைக்கொண்டு உடனுக்குடன் அறிந்திடவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் .. உதவுகிறது. ‘ட்ரோன்தொழில்நுட்பத்துடன் இணைந்து காடுகளில் விதை தூவி, அதன்மூலம் காடுகளைப் பெருக்கவும் .. பயன்படுகிறது.

உலக வெப்பமயமாதலுக்குக் காரணமான விஷ வாயுக்களில் ஒன்றான மீத்தேனை உருவாக்குவது அன்றாடம் சேரும் கழிவுப்பொருள்கள். உலக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அறிக்கையின்படி, மொத்த விஷ வாயுக்களில், இந்த வாயு மட்டும் 16% என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக் கழிவுகளை ஆராயவும், அதனை மறுசுழற்சி செய்யவும் .. தொழில்நுட்பம் உதவுகிறது.

வெப்பமயமாதலைத் தவிர்க்க நிலத்தைத் தூய்மையாக வைப்பது மட்டுமன்றி, கடலையும் சுத்தமாகக் காப்பது இன்றைய தேவையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. முன்பு வானூர்தி மூலம் இவை கண்காணிக்கப்பட்டு, இப்போது .. தொழில்நுட்பம் மூலம் துரிதமாகவும் திறன்படவும் செய்ய முடிகிறது.

அரசுகளுக்குக் காலநிலை முன்னறிவிப்பு - புயல், வெள்ளம், வணிக நிறுவனங்களுக்குக் கால நிலைத் தரவுகள் என்பது அவசியமாகிவிட்டது. இதன்மூலம் பெரிய இழப்புகளைத் தவிர்க்கவும், வணிகச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் செய்யவும் .. பெரிதும் உதவுகிறது.

உலகளவில் தொழிற்சாலைகள் மட்டும் 30% வெப்பமயமாதல் வாயுக்களை வெளிப்படுத்துகின்றன. இந்த அளவைக் கட்டுப்படுத்த குறிப்பாக, சுரங்கம், எரி எண்ணெய், எரிவாயு போன்ற கார்பன் அதிகம் வெளியாகும் பிரிவுகளுக்கு ..-யின் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இவ்வாறு .. அடிப்படையில் வெப்பமயமாதலைத் தவிர்ப்பதில் மறைமுக நண்பனாக விளங்குகிறது.

மற்றொரு பக்கம், உலகளாவிய வெப்பமயமாதலைத் தவிர்க்கும் முயற்சிக்குக் கொடுக்கும் விலை, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது விழாமல் பார்க்கவேண்டியதாயும் இருக்கிறது. ஏனென்றால், உலகின் பல பாகங்களில் நிலத்தடி எரிபொருளை நம்பி வாழும் ஏழ்மைச் சமுதாயத்தின் மக்களைக் குறைந்த விகிதத்தினர் என்று எண்ண முடியாது. ..-யின் பயன்பாடு இந்தப் பிரிவினரைப் பாதிக்காமலிருப்பதும் இன்றைய விஞ்ஞானத்தின் கடமை.