news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கொரோனா தொற்றுக்கான சிகிச்சையின்போது, அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் உயிரிழந்தது உண்மையானால், அதற்கான காப்பீட்டுத்தொகையை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தவேண்டும். இலாபத்திற்காக மட்டும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர் என்ற ஊகம் சரியானதல்ல. மருத்துவர்களைப் பாதுகாக்காவிட்டாலோ, அவர்களுக்குத் துணையாக நிற்காவிட்டாலோ நீதித் துறையைச் சமுதாயம் மன்னிக்காது.”                

உச்ச நீதிமன்றம்

உலகம் எந்த வேகத்தில் மாற்றத்தை அடைகிறதோ, அதே வேகத்தில் நாமும் மாறவேண்டும். இதில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால்கூட நாம் பின்தங்கியிருப்பதாகக் கூறிவிடுவார்கள். அதேபோல், தலைமைத்துவம் என்பதற்கு அவர்கள் உருவாக்கும் நேர்மறையான தாக்கம்தான் அடையாளம். செயற்கை நுண்ணறிவு (..) காலத்தில் நேர்மைதான் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை தேவை. எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில அடிப்படைகள் எப்போதும் மாறாது. அதில் மாணவர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.”    

திரு. மு..ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

இரயில் நிலையங்களில், வங்கிகளில் மற்றும் ஏனைய பொது இடங்களில் தமிழில் தொடர்ந்து பேசாமல்விட்டால், சமரசம் செய்துகொண்டு ஆங்கிலத்திலோ அல்லது புதிதாக வேலைக்கு வந்து இருப்பவர்கள் பேசுகிற இந்தியில் பேசத்தொடங்கினால் தமிழ் என்னவாகும்? அது குறித்த விழிப்புணர்வு இல்லை; அப்படிச் செய்கிறோம் என்கிற உணர்வும் இல்லை. தொடர்ந்து பல்வேறு தமிழ் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்; தமிழ் தெரிந்தவரிடம் தமிழில் மட்டுமே பேசவேண்டும்; தமிழ் தெரியாதவர்களிடமும் தமிழைக் கற்றுக்கொடுக்கும் விதம் அவர்கள் நம் மாநிலத்தில் இருந்தால் செய்யவேண்டும். சமரசம் செய்து கொள்கிறோம், நல்லவர்களாக நடந்துகொள்கிறோம் என்று நம் மொழியை விட்டுக்கொடுத்து, பிற மொழியைப் பயன்படுத்துகிறபோது நம் மொழி அழிவதைத் தடுக்க இயலாது.”    

திரு. சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்