‘நற்செய்தியின் இதயம் ஏழைகள்’ என்பது நம் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள்.
ஏழைகளை
நற்செய்தியிலிருந்து நாம் எடுத்துவிட்டால் அது இதயமற்ற செய்திகளாகத்தான் இருக்கும்.
ஏழைகள்
நற்செய்தியின் மையம் மட்டுமல்ல, ஆண்டவர் இயேசு கனவு கண்ட இறையாட்சி என்கிற இலட்சியச் சமுதாயத்தின் மையமாகவும் இருக்கின்றனர்.
விளிம்புகளில்
இருக்கிறவர்கள் மையத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்; அப்பொழுதுதான் இறையாட்சி மலரும். விளிம்புகளில் இருக்கின்ற மக்களை மையத்திற்கு அழைத்து வருகின்ற பணியைப் பல்வேறு சிரமங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் இத்தனை ஆண்டுகளாகச் செய்து வருகின்ற FSAG சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொன்சாகா
சகோதரிகளின் தலைமை அன்னை அவர்களுக்கும் ஆலோசகர் சகோதரிகளுக்கும் மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு ‘உங்கள் பணி தொடரட்டும்; உங்களுடைய பணி திரு அவைக்கும் சமுதாயத்திற்கும் தேவை; ஆகவே, நீங்கள் சோர்வடையாமல் பணி செய்யுங்கள்’ என்று
வாழ்த்துகின்றேன்.