கிறித்தவப் பத்திரிகையாளர்கள் மற்ற செய்தியாளர்களின் பங்களிப்பைவிட ஒருபடி மேலே பொறுப்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையின் அறிவிப்பாளர்கள்; நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்கள்; ‘பூமியின் உப்பு’ என்று அழைக்கப்படுகிறவர்கள் (மத் 5:13). பத்திரிகை அவர்களுக்கு வெறும் தொழில் அல்ல; அது ஒரு புனிதமான பணி. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மறக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிவு செய்யும் ஒரு தெய்வீக அழைப்பு. அவர்களின் பணி மனித கண்ணியத்தையும் மதச்சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது; கடவுளின் எல்லையற்ற அன்பைப் பிரதிபலிக்கிறது.
ஆயினும்,
இந்த அழைப்பில் சோதனைகள் இல்லாமல் இல்லை. கிறித்தவ ஊடகங்கள் கிறித்தவர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றன என்ற குறுகிய எண்ணங்களைப் போக்குவதும்
ஒரு பெரும் சவாலாகும். திரு அவையின் செய்திகளுக்கு அப்பால் நகர்ந்து, சமூகத்தின் பரந்த சிந்தனையுடன் ஈடுபட நமது பார்வையை விரிவுபடுத்தவேண்டும். தவறான தகவல்களும், சேர்ப்பு நிலைப்பாடு கொண்ட செய்திகளும் பெருகிவரும் இவ்வுலகில், துணிவுடன் உண்மையையும் நேர்மையையும் நிலை நிறுத்தவும், தீய எண்ணங்களுக்கு அடிபணியாமல் அநீதியை எதிர்கொள்ளவும் கிறித்தவ ஊடகவியலாளர்கள் பணிக்கப்படுகிறார்கள். இயேசு செய்தது போல, இவர்கள் உண்மையை அறிவிக்கிறார்கள்; “உண்மை அவர்களை விடுதலையாக்கும்” (யோவா
8:32). “நன்மை செய்வதில் மனம் தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்ககாலத்தில் அறுவடை செய்வோம்”
(கலா 6:9) எனும் புனித பவுலின் அறிவுரையிலிருந்து நாம் உத்வேகம் பெறுவோம்.
இதயத்துடன் தொடர்பு
கொள்ள
ஓர்
அழைப்பு
மே
12, 2025 அன்று நமது புதிய திருத்தந்தை லியோ அவர்கள், கத்தோலிக்க ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது, இரக்கத்துடனும்
நம்பகத்தன்மையுடனும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள அவர்களை வலியுறுத்தினார். அமைதியை வளர்க்கும் மற்றும் குரலற்றவர்களுக்குத் துணையாக இருக்கும் உரையாடலுக்கு எதிராகப் பிளவுபடுத்தும் தகவல்தொடர்புகளை நிராகரிக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
‘நாம் சத்தமாகவும் வலுவாகவும் தொடர்புகொள்ளத் தேவையில்லை; மாறாக, குரலற்றவர்கள், பலவீனமானவர்களின் குரல்களைக் கேட்கவும், அவர்களிடம் தகவல் சேகரிக்கவும் நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டும்’
என்று கேட்டுக்கொண்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுடன் திரு அவையின் உடனிருப்பைத் திருத்தந்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். உண்மை மற்றும் சனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்தார்; மேலும், கட்டுப்பாடு மற்றும் இலாப நோக்கத்தில் இயக்கப்படும் உலக மனநிலைக்கு எதிராக நாம் நிற்க வேண்டுமென எச்சரித்தார்.
இன்றைய காலத்தில் மக்கள் கடவுளுக்காக ஏங்குகிறார்கள் என்றும், அவர்கள் ஊடகவியலாளர்கள் மூலமாகவும் அவரைத் தேடுகிறார்கள் என்றும் அவர் நினைவூட்டினார்.
கிறித்தவப் பத்திரிகைகளைக்
கொண்டாடுதல்
இன்று,
ஆங்கிலம் அல்லது எந்த அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழியிலும் சிறந்து விளங்குவது கிறித்தவப்
பத்திரிகைகள்தாம். கிறித்தவத் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களால் இந்தியில் முன்மாதிரியான பத்திரிகைகள் வெளிவருகின்றன. எழுச்சி தரும் மதச்சார்பற்ற புத்தகங்களின் ஆசிரியர்கள் கிறித்தவர்களே. கிறித்தவ, சமூக மற்றும் மனித மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் அல்லது You Tube வீடியோக்களின்
எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்களில் முன்னிற்பவர்கள் கிறித்தவர்களே! இத்தகைய அசாதாரண பங்களிப்புகளை எண்ணிப்பார்க்கும்போது நாம் பெருமைப்படவேண்டும்; நமது பத்திரிகைகளை, ஊடகங்களை, எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டும்.
இந்த
யூபிலி ஆண்டு நம்மை ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்’ என்று
அழைக்கிறது. கிறித்தவப் பத்திரிகையாளர்கள் நம்பிக்கையின் விதைகளை விதைக்கவும், தவறான செய்திகளை எதிர்த்துப் போராடவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் ‘உலகின் ஒளி’
(மத் 5:14); மறைக்க முடியாத ஒரு மலையின் மீதுள்ள நகரமாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். “ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவா
1:5) என்று இறைவாக்கு நமக்கு உறுதியளிக்கிறது போல, அவர்கள் உண்மை
மற்றும் துணிவின் ஒளியாக ஒளிவீசவேண்டும்;
இருள் அவர்கள்மீது வெற்றிகொள்ளாது.
சவால்களைத் தாண்டி
எழுச்சி
கொள்வோம்!
எண்ணிமத்
தொழில்நுட்பத்தின் அழுத்தங்களால் நாம் திகைக்காமல், அச்சமின்றி எழுச்சி கொள்வோம். கத்தோலிக்க எழுத்தாளர்களின் படைப்பு வெறும் காகிதத்தில் உள்ள மை அல்ல; மாறாக,
அது நீதி, அமைதி மற்றும் உண்மைக்கான நற்செய்தியை முன்னறிவிக்கும் கருவி. ஆகவே, கிறித்தவ எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், நிருபர்கள் யாவரும் திரு அவைக்கும் நாட்டிற்கும் செய்யும் மேலான பணிகளுக்காக நாம் நன்றியைத் தெரிவிக்கவேண்டும்.
எண்ணற்ற
சவால்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் அழைப்புக்கு உண்மையாக இருக்கிறார்கள். இறைவன் நிறைவாக அவர்களை ஆசிர்வதித்து, அவர்களின் எதிர்கால முயற்சிகளை வழிநடத்துவாராக!
மொழியாக்கம்:
அருள்முனைவர்
செ.
இராஜசேகரன்