news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப்பகிர்வுகள் (23.11.2025)

கிறித்தவ ஒற்றுமைக்கான புதிய தொடக்கம்: கத்தோலிக்கமும் கிழக்கின் அசீரியத் திரு அவையும் ஒருமைப்பாதையில் முன்னேறுகின்றன.”

அக். 27, அசீரியத் திரு அவையின் முதுபெரும் தந்தை மூன்றாம் David Royel சந்திப்பு

மனமாற்றம், விடுதலை, புதிய பார்வையின் அருளில் இயேசுவைப் பின்தொடர்வதே நமது உண்மையான பயணம்.”

அக். 28, திருப்பீடப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் திருப்பலி  மறையுரை

மதங்களுக்கிடையேயான உரையாடலில் அன்பையும் உண்மையையும் வேராகக் கொண்டு, மனிதகுலத்தின் ஒற்றுமை, அமைதி மற்றும் நீதி நோக்கி நாம் ஒன்றிணைவோம்.”

அக். 29, புதன் மறைக்கல்வி உரை

“இளைஞர்கள் உண்மை, நம்பிக்கை, ஆன்மிகம், கல்வி மூலம் உயர்ந்து, சமூகமாற்றம் மற்றும் அமைதியை உருவாக்கவேண்டும்.”

அக். 30, கல்வி உலகின் விழா சிறப்புரை

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களை நம்பிக்கை, பகுத்தறிவு, படைப்பாற்றல் மற்றும் சமூக நன்மைக்கான மையமாகவும் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் ஊக்குவிக்கவேண்டும்.”

அக். 31, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் அமைப்பின் ODUCAL உறுப்பினர்களுடன்  சந்திப்பு

கல்வியே எதிர்நோக்கின் திருப்பயணம், சமத்துவம், ஒளி, உண்மை மற்றும் புனிதத்திற்கான உலகளாவிய அழைப்பாகும்.”

நவ 1, அனைத்துப் புனிதர் பெருவிழா மற்றும் கல்வி உலகத்தின் யூபிலிக்கான திருப்பலி

புனிதர்களின் ஒற்றுமையை நினைவூட்டி, மனிதகுலம் சகோதரத்துவம், அமைதி மற்றும் கடவுளின் அன்பில் ஒன்றிணையவேண்டும்.”

நவ 2, மூவேளைச் செபவுரை